வியாழன், 24 நவம்பர், 2011

துப்புகெட்ட தினமலர்…



நடுநிலை என்ற பெயரில் அரசியல்வாதிகளின் ஊடகத்தைவிட கேடுகட்டத்தனமான ஒரு கட்டுரையை தினமலர் வெளியிட்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தலாம் மக்களின் நம்பகத்தோடு என்பதனை தினமலரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலைக்கு என்ன தீர்வு எடுக்கலாம் , அந்த பிரச்சனை யாரை பாதிக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், மேலாதிக்கத்திற்காகவும் தனக்கு விருப்பு இல்லாத பட்சத்தில் வெறுப்பாக தனது சுய கருத்தை நடுநிலை என்ற பெயரில் மக்களுக்கு திணிக்கவும் செய்யும் தினமலருக்கு சிறப்புக் கட்டுரை எழுதிய நண்பரையும் மரியாதைக்குரிய ஆசிரியரையும் இடிந்தகரையில் குடிபெயர தைரியம் இருக்கிறதா?

போராட்டம் நடத்தும் 3பேரின்  எண்களை கொடுத்ததோடு அவர்களை இழிவு படுத்திய தங்களால், அணு உலைக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்களின் உண்மை நிலவரத்தை சொல்ல தைரியம் இல்லாதது ஏன்? அப்துல்கலாம் அவர்களின் எண் கொடுக்கலாமே தெளிவு படுத்த…. ?

அரசியல் அராஜகத்தை தட்டிக்கேட்க்க தைரியம் இல்லாத பா…. ஊடகம் தானே தினமலர் செய்தி ஊடகம்.

தினமலரைச்சார்ந்த யாருக்காவது தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் நண்பர்களே….உங்கள் ஜால்ரா நியாம் என்று !


அமெரிக்கபோரினால், ஆட்டோமிக் ஊரானியும் பதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குழைந்தைகளை பாருங்கள். www.rense.com/​general70/deathmde.htm இந்த நிலைமை வருங்கால சந்ததிக்கு தேவையா என்று சிந்தித்து எழுதுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக