வியாழன், 18 அக்டோபர், 2012

யோசிக்கலாமே…இனியாவது


ஒவ்வொரு முறையும் சென்னையில் சாலையில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையான பயணத்தால் கடுப்படையவும், ரௌத்திரம் அடையவும் செய்கிறது. 

ஏன் இப்படி என்று ஒரு நாள் நிதானமாக பார்க்கும் போது, அவசரம் அவசரம் அவசரம் இதுமட்டுமே காரணமாக தெரிந்தது… 

ஆனால் என்ன அவசரம் என்று பார்த்தால் காலையில் அலுவலகம் செல்லவும், மாலையில் வீட்டிற்கு செல்லவும் அவ்வளவு அவசரம்… 

சுடுதண்னீரை காலில் ஊற்றியவர்களைப்போல் இருசக்கர வாகனத்தை உற்..ர் ர்ர் என்று விரட்டி முடிந்த அளவு இடப்பக்கமாகவே சென்று, தோண்டிய கால்வாயில் விழுந்து நேரத்தை வீணாக்கி இருக்கிறார்கள். இடப்பக்கம் ஒரு வாகனம் பழுதடைந்து நின்றிருக்கும் போது இவர்கள் அந்த வாகனத்தை கடக்க பல நிமிடம் காத்திருக்க நேரிடும்… இதை விட ஒரு கொடுமை என்னவென்றால் அவசரத்தில் முன்னால் சென்ற வாகனத்தில் லேசாக உரசியோ முட்டியோ பெரிய வாய் சண்டை போடுவார்கள்… இப்படி நேரத்தை வீணாக்கும் அவசரம் தேவைதானா…. இந்த அவசரக்காரகள் சென்னையில் அதிகம்,,, அது நானாகவோ,,, நீங்களாகவோ,, நமது நண்பர்களாகவோ,, நண்பர்களின் தோழர்களாகவோ இருக்கலாம்… ஆனால் அவசரமு அஜாக்கிரதையும் ஆபத்துதான்..

இதோ சமீபத்தில் வந்த ஒரு புலனாய்வுத்தகவல்

மாநிலம் முழுவதும், ஆகஸ்ட் மாதம் வரையில், நடந்த விபத்துக்களில், 11, 046 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், 44 ஆயிரத்து 793 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில், 9,717 விபத்துக்களில், 10 ஆயிரத்து 511 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் உயிரிழப்புகளை பொறுத்தவரை, கனரக வாகனங்களாலும், இருசக்கர வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையாலும், ஏற்பட்ட விபத்துக்களே அதிகமாக உள்ளன.இது தவிர, அரசு பஸ்களால், 10 சதவீதத்திற்கும் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பள்ளி வாகனங்கள் விபத்துக்கு உள்ளான சம்பவங்களும் நடந்துள்ளன. 
                    -யோசிக்கலாமே…இனியாவது

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குழந்தைகள் எதற்காக....


ஒரு மாணவன் , திறமையாக படம் வரைவான். அவனுக்கு கட்டடங்களின் மீது ஒரு கற்பனைத்திறன் இயல்பாகவே இருந்தது.
அவனது வீட்டில் அவனை ஒரு மருத்துவனாக ஆக்க விருப்பப்பட்டு, மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க வற்புருத்துகின்றனர். அப்போது அவன் , தனது விருப்பமான கட்டடக்கலைத்துறையில் தான் கால்பதிக்கப் போவதாக சொல்கிறான். அப்போது அவர்களின் பெற்றோர்கள், சந்தையில் கத்தரிக்காய் வாங்க பேரம் பேசுவது போல், அவனிடம் எங்களுக்காக நீ மருத்துவம் படிக்க வேண்டாம், அதே மாதிரி நீ சாதாரண ஒரு வேலைக்கு போகாம, நல்ல கணிப்பொறி பொறியியலாளரா வரணும்னு சொல்றாங்க. அவன் இதிலும் நல்ல எதிர்காலம் இருக்குனு சொல்லி வாதாடி எந்த பயனும் இல்லை. அவங்க, பணம் சம்பாதிக்கவும் , ஒரு வெற்றுப்புகழ் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தவும் தனது மகனை பயன்படுத்துகின்றனர். Nata தேர்வு எழுத விண்ணப்பம் வாங்கிவரும் அவனை, அவனது தந்தை திட்டி விண்ணப்பத்தை கிழித்துவிடுகிறார். உனது விருப்பத்தின் படி , மருத்துவம் தேவையில்லை என்று நான் சம்மதித்தேன் , ஆனால் நீ என்னை அவமதிக்கிறாய் என்று கோபத்தை காட்டி செல்கின்றார். இதே விஷயத்தை அப்படியோ மீண்டும் அம்மாவும் ஒப்பிக்கின்றார் ,மென்மையாக. ஆனாலும் அவன் மனம் கடினப்பட்டது.

இயல்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நடந்த இந்த போராட்டத்தில் இயல்பாகவே எதிர்பார்ப்பு வெற்றி பெற்றதால், அவனும் B.E Computer Science படிக்க கல்லூரியில் சேர்ந்துவிட்டான். ஊரெல்லாம் அவனது தந்தையும் தாயும் தனது மகன் கம்ப்யூட்டர் இன் ஜினியர் சேர்ந்துட்டான்.. என்று தம்பட்டம் அடித்து மகனின் எதிர்காலக் கனவினை இவர்கள் காண ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் மன அழுத்தம் அதிகரிச்சதால் அதன் விளைவு….

அவன் பித்து பிடித்தவனாய் மாறிவிட்டான். படிப்பில் ஆர்வம் இல்லாமல் மாணவர்கள் மத்தியில் தனியாக தெரிய ஆரம்பித்தான். அது கல்லூரியில் இவனை வெளியேற்றும் அளவுக்கு பெரியதாக ஆயிற்று.

பெற்றோரிடம் இவன் இனி கல்லூரிக்கு வருவது சரியல்ல என்று அனுப்ப… பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து அவனது எதிர்காலத்தை பாழாக்கிவிட்டு…

இந்த ஆலமர சாமியாரிடம் மந்திரிச்சா சரியாகுமா…
அங்க ஒரு சைக்கியாரிடிக் இருக்காரு ரொம்ப கைராசிக்காரராம்…
ஊருல உள்ளவங்க கண்ணு பட்டு எல்லாமே ஒண்ணாயி இப்ப குழந்தையை இப்படி ஆக்கிடுச்சு….
   இப்பக்கூட இவங்க பண்ண தப்ப உணரல….

 பெற்றோர்களின் கனவு… அதை நினைவாக்கவா குழந்தைக்கள். அல்லது குழந்தைகளின் கனவினை நிறைவேற்ற பெற்றோர்களா…

வியாழன், 12 ஏப்ரல், 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர்கள் கூடி கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்; திருவள்ளுவர் ஆண்டு என்பதும் - ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.

ஆனால் அதனை மறந்து… இல்லை மறக்கவைத்து சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டு என்றனர்.
ஆட்சிக்காகவோ இல்லை தமிழுக்காகவோ… இரண்டும் பதவிக்காகத்தான் என்றாலும் கலைஞர் ஒரு அரசு சட்டத்தைக்கொண்டுவந்து தமிழ் புத்தாண்டு இனி தை முதல் நாள் என்று அறிவித்தது. மறைமலையடிகள் தலைமையில் நடந்ததை மக்கள் மறந்து கலைஞர் சொல்லியது என்று பேசத்துவங்கியதால் இப்போது அதிமுக அரசின் ஆதிக்கம், அதனை மறுபடியும் மாற்றி சித்திரை முதல்நாளில் கொண்டாட சட்டத்திருத்தம் செய்துவிட்டனர்.
தமிழர்களின் உயிர்களைப் பற்றிய கவலையின்றி…  தமிழர்களின் வாழ்வியலைப் பற்றிய அக்கரையின்றி….. இருக்கும் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு தேவையா …? தேவைதான் என்று கொண்டாடும் என் இனிய தமிழ் மக்களே…  இனிய, கசப்புடன் கூடிய புளிப்புச்சுவையில் துவர்ப்புடன் உவர்ப்பும் கார்ப்பும் கலந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..