செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒரு பரிட்சை எழுதினேன்...

ஒவ்வொரு முறையும்
பரிட்சை என்பது
பரிட்சையம் இல்லாதது!

யாரோ எழுதியதை நான் படித்து
... அதையே ஏன் எழுதவேண்டும்?

எவனோ கண்டறிந்ததை , படத்துடன்
நான் விவரிக்க வேண்டுமா?

வெற்றுத்தாளில்
கற்பனை தாண்டவமாடியது!

காத்தாடி விடும் வயதிலும்… சரி
காதலிக்கும் வயதிலும் .. சரி –
மனப்பாடம் மட்டுமே மதிப்பெண்கள்

எனது விடைத்தாளை விட - வினாத்தாள்
அதிக மதிப்பெண் பெற்றுவிடும் போல..!

திருத்தவே முடியாது,
என்னையும், எனது விடைத்தாளையும்

இரண்டிலுமே….
திருத்த ஏதும் இல்லை!!!

அதனால்

திருத்துங்கள் முதலில்
வினாத்தாளை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக