திங்கள், 28 பிப்ரவரி, 2011

பாதையை தேடாதே.. உருவாக்கு

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். - புரட்சியாளர் ‍அம்பேத்கர்

'கொலை வாளினை எடடா
மிகும் கொடியோர் செயல் அறவே' -புரட்சிக்கவி.பாரதிதாசன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே - சேகுவேரா

கடவுளை மற மனிதனை நினை!!!- பெரியார்

"மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாக
செயல்படுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்."- ‍காரல் மார்க்ஸ்


"பாதையை தேடாதே.. உருவாக்கு" - லெனின்

"வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்." - மாவீரன் பகத்சிங்


தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா
- பட்டுக்கோட்டை


"வறுமையினால் சாவு அதிகமானால், சாவுக்குப் பதிலாகக் கலகத்தை அறுவடை செய்'' - ‍மெக்சிகப் புரட்சியாளர் மார்க்கோஸ்


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
- அப்துல் ரகுமான்

சனி, 26 பிப்ரவரி, 2011

உலகின் மிக கேவலமான புகைப்படம்


எச்சரிக்கை : குழந்தைகள், கர்ப்பினி பெண்கள் மனரீதியான பாதிப்பு உள்ளவர்கள் பார்க்க கூடாத புகைப்படம்

மானம்கெட்ட சிரிப்பு என்பார்களே ஒரு வேலை இதுதானோ!!

தி.மு.க., பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி
 
 
நன்றி-http://rootsredindia.blogspot.com/2011/02/blog-post_20.html

இப்படியும் ஓரு எம்.எல்.ஏ இருக்க முடியுமா தமிழ்நாட்டில்



இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதி யோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன் னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.

‘எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதா ரம்” என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட் டுப் பெண்!

‘பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமை யாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத் துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

அம்மா, அப்பா: கூலி வேலை மகள் : எம்எல்ஏ

இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி!

“ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடை யாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.

‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல் லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்... ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

“சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார் கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?
 
 

வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஒளியேந்திய பெண் - ஈரோம் சர்மிளா

 ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..

** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.

** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.

** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.

** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.

** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?

** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.

** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.

** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...

ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.

நாடகத்தை காண இங்கே சொடுக்குங்கள்..

குறிப்பு: இதை வாசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஒளிப்பதிவாளர் திரு. சி. ஜெ. ராஜ்குமார்


சி.ஜெ. ராஜ்குமார் இவர் P.S.G கல்லூரியில் மெக்கானிக்கல் பட்டயப் படிப்பு படிக்கும்போதே ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொண்டு கல்லூரியின் மூலமாகவே பல போட்டிகளில் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான ஒளிப்படப் போட்டிகளில் பரிசுகளை வென்றதோடு உடன் படித்த மாணவர்களையும் ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொள்ள செய்தார். பின்னர், திரைப்பட ஒளிப்பதிவை பெங்களூரில் S.J.P. கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்து முடித்தார்.
பின்னர், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.
இவர் ஒளிப்பதிவு செய்த மற்றொரு திரைப்படமான "மண்" இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் எடுக்கப்பட்ட முதல் படம். ரா. புதியவன் இயக்கிய இப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. பெரியார் படத்தில் முக்கியமானக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது இவரே.
சமீபத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" எனும் குறும்படம் "பெர்லின் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் பங்கேற்றுள்ளது. இது வரை வேறெந்த தமிழ் படங்களும் இப்பெருமையை பெற்றதில்லை. மேலும் இப்படம் உலக பல விருதுகளை பெற்றுள்ளது.
நம்முடைய தமிழ் ஸ்டுடியோவிற்காக திரு. சி.ஜெ. ராஜ்குமார் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்த ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தின்பாடத்திட்டங்கள்:
1. ஒளிப்படம் மற்றும் திரைப்படக் கலை வரலாறு.
2. கேமரா வகைகள்
3. பிலிம் தோற்றமும் வளர்ச்சியும்
4. பிலிம் வகைகள்
5. கேமராக் கோணங்களும், அதனை இயக்குதலும்
6. லென்ஸ் வகைகளும், அதன் செயல்பாடுகளும்
மேலும், திரைப்படத் தயாரிப்பின்
முன்னேற்பாடுகள் (Pre-Production)
படப்பிடிப்பு (Shooting)
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production)

போஸ்ட் ஃபுரடக்ஷன் :-


போஸ்ட் ஃபுரடக்ஷன் :-
சி. ஜெ. ராஜ்குமார் 

ரீ - ரிக்கார்டிங் (Re-Recordning) :
இறுதிக்கட்ட படத்தொகுப்பான Final Cut முடிந்து பிறகு, கம்ப்யூட்டரிலிருந்து எடிட் செய்யப்பட்ட காட்சிகளை ஒரு டேப்பில் அல்லது DVD-ல் டைம் கோடு (Time Code) உதவியுடன் பிரதி எடுத்து அப்படத்தில் இசையமைப்பாளருக்கு பின்னணி இசை சேர்க்க கொடுக்கப்படும்.
இசையமைப்பாளர் அவரது ஸ்டுடியோவில் காட்சிகளின் (Time Code) டைம் கோடைப் பார்த்து ரீல் வாரியாக காட்சிகளுக்கேற்றவாறு, பின்னணி இசையைச் சேர்ப்பார். அதை இறுதிக்கட்ட ஒலிக்கலவைக்கு ஏற்ப டேப்பிலோ அல்லது CD-யிலோ (Audiographer) ஆடியோகிராஃபரின் தேவைக்கேற்ப வேறெந்த வடிவத்திலோ கொடுப்பார்.
சிறப்பு சப்தம் (Effects) :
ஒவ்வொரு காட்சிக்கும் சிறப்பு சப்தம் அவசியமாகிறது ; அந்தந்த காட்சியின் தன்மைக்கேற்ப, அக்காட்சியில் இடம்பெறும் பொருட்களின் சப்தங்கள் உதாரணமாக, தொலைபேசி அழைப்பு, அழைப்பு மணி, காலடி ஓசை, மின்விசிறி சப்தம், மேஜை மீது வைக்கப்படும் பொருளின் ஓசை, ரயில், பேருந்து சப்தம் போன்ற காட்சிகளின் Timingகிற்கு ஏற்றவாறு சிறப்புச் சப்தங்கள் இணைக்கப்படுகிறது.
மிக்ஸிங் (Mixing) :
திரைப்படத்தின் வசனம், பின்னணி இசை, சிறப்புச் சப்தங்கள் போன்ற ஒலிகள் தனித்தனியாக பல டிராக்குகளாக இருக்கும். இதை ஆடியோகிராஃபரானவர், அக்காட்சியின் தன்மைக்கேற்றவாறு ஒலியின் அளவைத் தீர்மானிப்பார். உதாரணமாக ஒரு காட்சியில் பின்னணி இசை தேவையில்லையென்றால் அதை இயக்குநரின் ஒப்புதலோடு ஃபைனல் மிக்ஸிங்கில் நீக்கவும் முடியும்.
இவ்வாறு வசனம், இசை, சிறப்புச் சப்தம் அனைத்தையும் ஒன்று சேர்த்து மேக்னடிக் டேப்பில் (Magnetic Tape) பதிவு செய்யப்படும். பின்னர், அந்த டேப்பை (Sound Negative) சவுண்ட் நெகடிவாக சவுண்ட் லேபில் உருவாக்குவார்கள்.
அப்படத்திற்கு (Dolby) டால்பி (DTS) டி.டி.எஸ்., போன்ற விசேஷ ஒலி நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால், இதற்குப் பின்னர் நடைபெறும்.
நெகடிங் கட்டிங் (Nagative Cutting) :
இன்றைய நவீன காலகட்டத்தில் திரைப்படத்தை முன்காலத்தைப் போல பிரிண்ட் போடப்பட்டு மூவியிலோ அல்லது ஸ்டீன் பேக் (Steen Back) கருவியில் எடிட் செய்யப்படுவதில்லை.
மொத்தப் படத்தின் படத்தொகுப்பும் கம்ப்யூட்டரிலேயே நடைபெறுவதால் லாப்பிலிருந்து படத்தின் நெகடிவை வரவழைத்து கம்ப்யூட்டரிலிருந்து ஃபைனல் கட் முடிந்த பின், அப்படத் தொகுப்பாளர் 'கட் லிஸ்ட்' (Cut List) எடுத்து அதை வைத்து நெகட்டிவை கட் செய்து இணைப்பார்.

 

போஸ்ட் ஃபுரடக்ஷன்


போஸ்ட் ஃபுரடக்ஷன் :-
சி. ஜெ. ராஜ்குமார் 

சினிமா படத் தயாரிப்பில் முக்கியமான கட்டம் 'போஸ்ட் புரோடக்ஷன்' (Post Production) என்னும் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணி. எடிட்டிங், டப்பிங், ரீ ரிக்கார்டிங், சிறப்பு சப்தம் (Effects Sound). இறுதி ஒலிக்கலவை (Final Sound Mixing), கிரேடிங் (நிறத் தேர்வு) கடைசியாக பிரதி எடுப்பது வரை படத்தொகுப்பாளரின் (Editor) பங்கு முக்கியமானது. இவரது வேலை அட்டவணையைப் பொறுத்தே எல்லா முடிவுகளையும், அடுத்தகட்ட பணிக்கான இலக்கையும் இயக்குனர் தீர்மானிக்க முடியும்.
படத்தொகுப்பு பணியை ஆரம்பிக்க, முதலில் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது லேபிள் நெகடிவ்வாக ப்ராஸஸிங் செய்யப்பட்டு இருக்கும். அப்ஃபிலிம் 'டெலி-சினி) என்ற முறைக்கு ஃபிலிம்மிலிருக்கும் 'நெகடிங்' இமேஜ் (Image) பாஸிட்டிவ்வாக வீடியோ டேப்புக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதுவே இன்று நடைமுறையிலிருக்கும் 'Rushes". (ரஷ்சஸ் - ஒலி இல்லாமல் காட்சிகளை இயக்குனரும் அப்படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிடுவது). பின்னர் பதிவு செய்யப்பட்ட காட்சிகளானது வீடியோ டேப்பிலிருந்து ரெக்கார்டர் (ரெகார்டர்) உதவியுடன் கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்லப்படும்.
பைநல் கட் ப்ரோ (Final Cut Pro), ஆவிட் (AVID) எடிட்டிங் சாஃப்ட்வேர்களின் உதவியோடு படத்தொகுப்பு முறை ஆரம்பிக்கும். முதலில் காட்சிகளின் வரிசை வரைமுறை செய்யப்படும். படப்பிடிப்பு தளத்தில் 'வசனத்தை' சினிமாவில் தனியாக 'நாக்ரா' கருவி மூலம் பதிவு செய்யப்படுவதால்; படத்தின் மொத்த வசன ஒலியை கம்ப்யூட்டருக்கு மாற்றம் செய்து; படத்தின் மொத்த வசன ஒலியை கம்ப்யூட்டருக்கு மாற்றம் செய்து, க்ளாப் போர்ட் (Clap Board) உதவியோடு அவ்வொலியை காட்சிகளோடு இணைத்த பிறகே, படத்தொகுப்பு - ரஃப்கட் (Rough cut) ஆரம்பிக்கப்படுகிறது.
டப்பிங்கிற்கு முன்னர் எடிட்டிங் செய்யும்போது, படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் இரைச்சல் சம்பதங்களோடு தான் நடிகர்கள் பேசும் வசன ஒலியும் பதிவாகியிருக்கும். ஆதலால் படத்தொகுப்பாளர் டப்பிங் முடிந்த பின்னரே படத்தொகுப்பு சம்பந்தப்பட்ட இறுதி வடிவத்தைக் கொடுப்பார். இதை ஃபைனல் கட் (Final Cut) என்பார்கள்.
டப்பிங் (Dubbing) :-
படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா ஃபிலிமில் வசனத்தைப் பதிவு செய்யாது. அதோடு படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் இரைச்சலும், மொழி தெரியாமல் நடிக்கும் நடிகர்களும் இருக்கும் காரணங்களால் படப்பிடிப்புத் தளங்களில் பதிவு செய்யப்படும் வசனங்களை உபயோகப்படுத்த இயலாது.
ஆதலால் வசனங்கள் டப்பிங் தியேட்டரில் மறுபதிவு செய்யப்படுகிறது.
டப்பிங் தியேட்டர் :
டப்பிங் தியேட்டர் என்பது முழுமையாகக் குளிரூட்டப்பட்ட ஒலிபுகா வண்ணம் (Sound Proof) பாதுகாப்பாகக் கட்டப்பட்ட ஓர் அரங்கமாகும். டப்பிங் தியேட்டரில் சவுண்ட் இன்ஜினியரின் நேரடிக் கண்காணிப்பில்தான் டப்பிங் நடைபெறும். இப்போது டப்பிங் முழுக்க முழுக்க கம்ப்யூட்டரின் உதவியோடு நடத்தப்படுகிறது.
ஒரு காட்சிக்குச் சம்பந்தமான டப்பிங் நடக்கும்போது, அக்காட்சியில் நடித்திருக்கும் அனைவரும் டப்பிங் பேச வர வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் வந்து பேசிவிட்டுப் போகலாம். பிறகு எல்லா டிராக்குகளையும் ஒன்றிணைத்து பதிவு செய்யப்படும்.

 

ஃபிலிம் ப்ராஸஸிங்


ஃபிலிம் ப்ராஸஸிங்
சி. ஜெ. ராஜ்குமார் 

ஃபிலிம்மானது பதிவு செய்யப்பட்டவுடன் பாதுகாப்பாக ஒளி புகாதவாறு பேக்கிங் (Packing) செய்யப்படும். பின்னர் ஒளிப்பதிவு குறிப்புகள் எழுதப்படும்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் அன்றைய தினமே ஃபிலிமை ப்ராஸஸ் செய்வது பாதுகாப்பானது. ஒருவேளை வெளி மாநிலமோ வெளிநாடுகளில் படிப்பிடிப்பு நடந்தால், பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது குளிரூட்டப்பட்ட அறைகளில் பத்திரப்படுத்த வேண்டும். பிறகு படப்பிடிப்பு முடிந்து திரும்பியவுடன் லாப்பில் ஃபிலிமை ப்ராஸஸிங் செய்து விட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது லாப்பிற்கு வந்தவுடன் அதை டார்க் ரூம் (Dark Room) எடுத்துச் சென்று ஃபிலிமை முழுமையாக சோதனை செய்து ஃபிலிம் சுருள்கள் ஒவ்வொன்றாக இணைப்பார்கள். இணைப்பானது 1200 அடியாக முறைப்படுத்தபடும். பிறகு டேவலப்பிங் அறைக்கு அனுப்பப்படும்.
டேவலப்பிங் பெரும்பாலான லாப்புகளில் ஈ.சி.என். (E.C.N.) 'ஈஸ்ட்மேன் கலர் நெகடிங் ஃப்ராஸஸ்' (Eastman Colour Negative) முறையில் செய்யப்படுகிறது.
'டேவலப்பிங்'ல் பல நிலைகள் உள்ளன.
பீரி பாத் (Pre bath) :
ஃபிலிம்மில் இரு பக்கம் உள்ளது. ஒன்று, இமெல்ஷன் மற்றும் ''கிலேஸ்ட் சைட் (Glazed side). இங்கே ஃபிலிம்மிலிருக்கும் 'கிலேஸ்ட்' பக்கத்தில் ஆன்ட்டிஹலேஷன் லேயர் (Anti Hallation Layer) 'பிரீபாத்தில் அகற்றப்படுகிறது.
'இமெல்ஷன்' பக்கமானது 'ஒளி' பதிவாகும் பகுதி. 'ஆன்ட்ஹலேஷன்' பகுதியானது தேவையில்லாத ஒளியைத் தடுக்கும் பகுதியாகும். ஆதலால் 'பிரிபாத்' முறையில் இப்பகுதியை அகற்றிய பின்னரே (Develope) டேவலப்பிங் ஆரம்பமாகும்.
டேவலப்பர் (Developer) :
இரண்டாம் கட்டமான இங்கு ஃபிலிம்மில் இருக்கும் எமல்சன் பகுதியானது 'டேவலப்பர்' மூலமாக ஒளிப்பட்ட பகுதியான சில்வர் ஆலைட்ஸ் (Silver Hallides) 'மேடாலிக் சில்வராக' (Mettallic Silver) மாற்றப்படுகிறது.
ஸ்டாப் பாத் (Stop bath) :
டேலப்பிங் செய்த பின்பு இக்கட்டத்தில் மேலும் ரசாயண மாற்றம் ஏற்படாமலிருக்க 'ஸ்டாப் பாத்' செய்யப்படுகிறது.
கழுவுதல் (Wash) :
இப்பகுதியில் ஃபிலிம்மானது சுத்தமான தண்ணீரால் கழுவப்படுகிறது.
ப்ளீச் (Bleach) :
ஃபிலிம்மில் இருக்கும் தேவையில்லாத சில்வர் அகற்றப்படுகிறது.
கழுவுதல் (Wash) :
ஃபிலிம்மில் இருக்கும் 'ப்ளீச்' ரசாயனத்தை கழுவுதல்.
ஃபிக்ஸிங் (Fixing) :
இந்த கட்டத்தில் ஃபிலிம்மிலிருக்கும் 'சில்வர்' பிரித்து எடுக்கப்பட்டு கடைசியில் 'டை இமேஜ்' (Dye image) மட்டுமே இருக்கும்.
மீண்டும் ஃபிலிம் கழுவப்பட்டு 'Drying' (டிரையிங்) ஃபிலிம்மில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. பிறகு உலர வைக்கப்படுகிறது.
இப்போது ஃபிலிம்மானது 'நெகடிவ்வாக' ஆன பின் மீண்டும் சோதனை செய்யப்பட்டு லாப்பில் பாதுகாப்பாக வைக்கப்படும்.


ஃபிலிம் ப்ராஸஸிங்


ஃபிலிம் ப்ராஸஸிங்
சி. ஜெ. ராஜ்குமார் 

ஃபிலிம்மானது பதிவு செய்யப்பட்டவுடன் பாதுகாப்பாக ஒளி புகாதவாறு பேக்கிங் (Packing) செய்யப்படும். பின்னர் ஒளிப்பதிவு குறிப்புகள் எழுதப்படும்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் அன்றைய தினமே ஃபிலிமை ப்ராஸஸ் செய்வது பாதுகாப்பானது. ஒருவேளை வெளி மாநிலமோ வெளிநாடுகளில் படிப்பிடிப்பு நடந்தால், பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது குளிரூட்டப்பட்ட அறைகளில் பத்திரப்படுத்த வேண்டும். பிறகு படப்பிடிப்பு முடிந்து திரும்பியவுடன் லாப்பில் ஃபிலிமை ப்ராஸஸிங் செய்து விட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது லாப்பிற்கு வந்தவுடன் அதை டார்க் ரூம் (Dark Room) எடுத்துச் சென்று ஃபிலிமை முழுமையாக சோதனை செய்து ஃபிலிம் சுருள்கள் ஒவ்வொன்றாக இணைப்பார்கள். இணைப்பானது 1200 அடியாக முறைப்படுத்தபடும். பிறகு டேவலப்பிங் அறைக்கு அனுப்பப்படும்.
டேவலப்பிங் பெரும்பாலான லாப்புகளில் ஈ.சி.என். (E.C.N.) 'ஈஸ்ட்மேன் கலர் நெகடிங் ஃப்ராஸஸ்' (Eastman Colour Negative) முறையில் செய்யப்படுகிறது.
'டேவலப்பிங்'ல் பல நிலைகள் உள்ளன.
பீரி பாத் (Pre bath) :
ஃபிலிம்மில் இரு பக்கம் உள்ளது. ஒன்று, இமெல்ஷன் மற்றும் ''கிலேஸ்ட் சைட் (Glazed side). இங்கே ஃபிலிம்மிலிருக்கும் 'கிலேஸ்ட்' பக்கத்தில் ஆன்ட்டிஹலேஷன் லேயர் (Anti Hallation Layer) 'பிரீபாத்தில் அகற்றப்படுகிறது.
'இமெல்ஷன்' பக்கமானது 'ஒளி' பதிவாகும் பகுதி. 'ஆன்ட்ஹலேஷன்' பகுதியானது தேவையில்லாத ஒளியைத் தடுக்கும் பகுதியாகும். ஆதலால் 'பிரிபாத்' முறையில் இப்பகுதியை அகற்றிய பின்னரே (Develope) டேவலப்பிங் ஆரம்பமாகும்.
டேவலப்பர் (Developer) :
இரண்டாம் கட்டமான இங்கு ஃபிலிம்மில் இருக்கும் எமல்சன் பகுதியானது 'டேவலப்பர்' மூலமாக ஒளிப்பட்ட பகுதியான சில்வர் ஆலைட்ஸ் (Silver Hallides) 'மேடாலிக் சில்வராக' (Mettallic Silver) மாற்றப்படுகிறது.
ஸ்டாப் பாத் (Stop bath) :
டேலப்பிங் செய்த பின்பு இக்கட்டத்தில் மேலும் ரசாயண மாற்றம் ஏற்படாமலிருக்க 'ஸ்டாப் பாத்' செய்யப்படுகிறது.
கழுவுதல் (Wash) :
இப்பகுதியில் ஃபிலிம்மானது சுத்தமான தண்ணீரால் கழுவப்படுகிறது.
ப்ளீச் (Bleach) :
ஃபிலிம்மில் இருக்கும் தேவையில்லாத சில்வர் அகற்றப்படுகிறது.
கழுவுதல் (Wash) :
ஃபிலிம்மில் இருக்கும் 'ப்ளீச்' ரசாயனத்தை கழுவுதல்.
ஃபிக்ஸிங் (Fixing) :
இந்த கட்டத்தில் ஃபிலிம்மிலிருக்கும் 'சில்வர்' பிரித்து எடுக்கப்பட்டு கடைசியில் 'டை இமேஜ்' (Dye image) மட்டுமே இருக்கும்.
மீண்டும் ஃபிலிம் கழுவப்பட்டு 'Drying' (டிரையிங்) ஃபிலிம்மில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. பிறகு உலர வைக்கப்படுகிறது.
இப்போது ஃபிலிம்மானது 'நெகடிவ்வாக' ஆன பின் மீண்டும் சோதனை செய்யப்பட்டு லாப்பில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

 

கேமிரா இயக்குவதற்கு முன்பு-


கேமிரா இயக்குவதற்கு முன்பு
சி. ஜெ. ராஜ்குமார் 

Start காமிரா.... முன்பு
ஒளிப்பதிவு இயக்குனர் எழுத்தாளரின் வார்த்தைகளை, இயக்குனரின் கற்பனைக் கேற்ப காட்சிகளாய் பதிவு செய்யும் முன்பு அன்றைய தினம் எவ்வளவு காட்சிகள், அதற்கேற்ப ப்லிம் °டாக் வெளிச்ச கருவிகள், காமிராவின் இயக்கம் மற்றும் லைட் பில்டர்கள் இப்படியான அடிப்படை விஷயங்களை தேர்வு செய்து விட்டு இயக்குனரின் திரைக்கதை முழுவதுமாக உள் வாங்கி காமிராவை இயக்குவதற்கு முன்பு இங்கே சில முக்கியமான கேள்வி அட்டவணையை ஒளிப்பதிவாளர் தன் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* இயக்குனர் காட்சியை விளக்கிய பிறகு ஒளிப்பதிவாளருக்கு தோன்ற வேண்டிய முக்கியமான இக்கேள்வி முறை ஓர் சிறந்த காட்சிபடுத்தும் வித்தைக்கு பயிற்சியாகும்.
* காமிராவை movement-ல் கதாபாத்திரங்களுடன் ஒன்றி அவர்களின் அசைவுகளுக்கு ஏற்ப பின் தொடர்கிறதா?
* Establishment-ல் காமிரா எப்படி “புவியியல் அமைப்பு” மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த கோணத்தில் பார்வையாளர்களுக்கு பதிவு செய்து காட்ட வேண்டும்?
* காட்சியில் டிஜிட்டல் மூவ்மெண்ட் அமைக்கும்போது எந்த தருணத்திலிருந்து நகர்வை (movement) ஆரம்பிக்க வேண்டும், பிறகு மூவ்மெண்டில் அருகாமைக்கு செல்கையில் பார்வையாளரின் பார்வையில் பொருளை நோக்கியா அல்லது கதாபாத்திரத்தை நோக்கியா அந்த நகர்த்தல் முடியவேண்டும்?
* காட்சியில் காமிரா ( truck-back) பின் நோக்கி பயணிக்கும்போது அது கதாபாத்திரத்தின் பார்வையை விட்டு அகலப் பார்வைக்கு எப்போது செல்லவேண்டும்?
* காமிரா நகர்கையில் காட்சியில் தேவையான பிற முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்துகிறதா?
* காமிராவின் மூவ்மெண்ட் புதிய கதாபாத்திரங்களின் புதிய கோணத்தில் பிரேமுக்குள் compose செய்வதற்கா?
* காட்சியில் காமிரா எப்பொழுது (character point of view) கதாபாத்திரத்தின் பார்வையில் செயல்படவேண்டும்.
* பார்வையாளர்களுக்கு காட்சியில் காமிரா வாயிலாக கதாபாத்திரத்தின் தன்மையை நேரடியாக எந்த ஷாட்டில் தொடர்பு ஏற்படுத்த போகிறோம்?
* ஒரு காட்சியை பல (character point of view) மூலமாக பதிவு செய்யும்போது, அதில் காமிராவின் உயரம் மாறுபடுகிறதா? எவ்வாறு அவ்வுயரம் அந்த பார்வை தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது?
* காமிரா அசைவுகளை (smooth) மூவ்மெண்டில் அமைப்பதா அல்லது (hand held camera) வகையான சில அதிர்வுகளோடு மூவ்மெண்டை அமைக்கப் போகிறோமா?
* மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளும் ஒளிப்பதிவு செய்யும் முன்பு இயக்குனரின் திரைக்கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளர் தன் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கேமிரா இயக்குவதற்கு முன்பு


கேமிரா இயக்குவதற்கு முன்பு
சி. ஜெ. ராஜ்குமார் 

முக்கிய உபகரணங்கள் - பெயர் பட்டியல்
Spreader (விரிப்பு)
Stand (ட்ரைபாட் ஸ்டேண்ட்)
Head ((ஹெட்)
Camera (காமிரா)
Power line (மின்சார இணைப்பு)
Megazine (மேகஸின்)
Lens (லென்ஸ்)
Filter (ஃபில்டர்)
Film Raw stock (ரா ஸ்டாக்)
Camera Report (காமிரா அட்டவணை)
Film changing Bag (ஃபிலிம் பை)
Empty film can (ஃபிலிம் பெட்டி)
* காமிரா ஃபிலிமோடு பதிவு செய்வதற்கு முன்பு, அதன் இயக்கத்தன்மையை சரிபார்க்க முதலில் ஃபிலிம் மேகஸின் - ஐ பொருத்தாமல் வெறும் காமிராவை மட்டும் இயக்கிப் பார்க்க வேண்டும்.
* குளிர் பிரதேசமென்றால் காமிராவை ஃபிலிம் இல்லாமல் சில நிமிடங்களுக்கு அதிகாகவே ஓட்டிப்பார்ப்து பாதுகாப்பானது.
*ஃபிலிம்- ஐ மேகஸினோடு காமிராவில் பொருத்திய பின்பு காமிரா அறையை மூடாமல் ஒரு சில நிமிடங்கள் காமிராவை ஓட்டிப் பார்த்துவிட்டு பிறகு ஃபிலிமில் ஏதாவது கோடுகள் தெரிகிறதா அல்லது சரியாக கொக்கிகளில் பொருந்துகிறதா என்று பார்த்தபின்பே காமிரா அறையை மூடி காட்சி பதிவு செய்ய தயாராக வேண்டும். இக்காரியத்தை தினமும் ஆரம்ப நேரங்களில் மட்டும் செய்தால் போதும்.
1. Spreader (விரிப்பு)

காமிரா பொருத்தப்படும் ஸ்டேண்ட் (Stand) ஆனது ட்ரைபாட் (Tripond) என்று அழைக்கப்படும். இந்த சாதனத்தின் கால்களின் இறுதியில் கூர்மையாக இருக்கும். அது சமவெளியாக இல்லாத மண் குழிகளில் நிறுத்த உதவும். அதுவே சமவெளி தரையில் வைத்தால் வழுக்கிவிடும், ஆதலால் ட்ரைபாட்டை (Spreader) மேல் வைத்து பயன்படுத்துவார்கள்.
2. ட்ரைபாட் ஸ்டேண்டு (Tripond stand)

காமிரா வைத்து இயக்குவதற்கு பயன்படும் ட்ரைபாட் ன்று கால்கள் கொண்டது. அம்மூன்று கால்களை வைத்து உயரத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும்.
சராசரியாக ட்ரைபாட் வைத்து இயக்கப்படும் உயரமானது மனிதனின் கண்களை மையப்படுத்தியே உள்ளது.
3. ஹெட் (Head)

காமிராவை ட்ரைபாட் (Tripond) மீது வைப்பதற்கு பல வகையான ஹெட் (Head) பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹெட்டின் முக்கியமான பணி காமிராவில் பான் (Pan) அன்ட் டில்ட் (Tilt) நகர்வுகளை செய்யவும் சில அதிர்வுகளை மட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
ஹெட் வகைகள்
Geared Head
Fluid Head
Crank Head
4. மின்சார இணைப்பு (Power line )
காமிரா இயக்குவதற்கு தேவையான மின் சக்தி 12 வோல்டிலிருந்து 24 வோல்ட் பாட்டரிகள் (Batteries) உதவுகிறது.
படப்பிடிப்பு சமயங்களில் இப்பாட்டரிகள் முபமையாக சார்ஜ் (charge) செய்யப்பட்டிருக்க வேண்டும்,
(குறிப்பு : இரண்டு பாட்டரிகள் அவசியம்)
5. மேகஸின் (Megazine)
பிலிம் மேகஸின் 400 அடி கொண்டவை இரண்டு மேகஸின்கள் அவசியம். ஒன்று ஃபிலிமோடு காமிராவில் பொருத்தி இயக்குவதற்கும்; மற்றொன்று முடிந்தவுடன் உடனடியாகப் பொருத்துவதற்கும்.
6. லென்ஸ் ஃபில்டர்கள்
அன்றைய காட்சிக்கு அல்லது ஒளிப்பதிவாளரின் பயன்பாட்டிற்கு தேவையான லென்ஸ் ஃபில்டர்கள் உள்ளதா என்று சரி பார்த்துவிட்டு அதில் தூசி, கை ரேகை போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யவேண்டும், அதற்கு தேவையான (லென்ஸ் க்ளினர்) (lens cleaner) பயன்படுத்த வேண்டும்.
7. ரா ஸ்டாக் (Raw stock)

ரா - ஸ்டாக் என்றால் பதிவு செய்யப்படாத ஃபிலிம் பெரும்பாலான ரா ஸ்டாக் 400அடி பெட்டிகளில் வருகிறது.
சினிமா ஒளிப்பதிவிற்கு பயன்படும் ஃபிலிம்கள் நீண்ட நாட்கள் கழித்து உபயோகப்படுத்தக் கூடாது. அன்றைய பணிக்கு அன்றைய தினமோ அல்லது முன் இரவோ வாங்கி, குளிர் அறைகளில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
நாம் பயன்படுத்தப்போகும் ஃபிலிம் ஸ்டாக் வகைகளில் சில அடிகளை படப்பிடிப்பு நடக்கும் முன்பு ஃபாக் டெஸ்ட் (Fog Test) லாப் (Lab) செய்வது பாதுகாப்பானது.
ஃபாக் டெஸ்ட் என்பது ஃபிலிம் சரியான நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளும் முறை
8. காமிரா அட்டவணை (Camera Report)
ஒளிப்பதிவு இயக்குனரின் கீழ் பணிபுரியும் உதவி ஒளிப்பதிவாளர்கள் இக் காமிரா ரிப்போர்ட் எழுதவேண்டும்.
ஒவ்வொரு காட்சிக்கு என்னென்ன
லென்ஸ் (Lens)
ஃபிலிம் (Film)
எக்ஸ்போஸர் (Exposer )
ஃபில்டர் (Filter)
வெளிப்புறக்காட்சியா உட்புறக்காட்சியா (Exterior /Interior)
காமிரா FPSஎவ்வளவு ஃப்ரேம்களில் இயக்கப்படுகிறது
லைட்டிங் (Lighting)
போன்ற தகவல்களை காமிரா ரிப்போர்டில் குறித்துக் கொள்வது முக்கியம். இத்தகவல்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் லாபில் (Lab) கிரேடிங் (Grading) செய்யும்போது ஒளிப்பதிவாளருக்குத் தேவைப்படும்.
9. ஃபிலிம் பை (film changing bag)
கறுப்பு நிறத்தில் இருக்கும் இப் பையானது ஒளி புகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஃபிலிமை இப்பை (film changing bag) மூலம் ஃபிலிம் மாகஸினுக்கு (Film Magazine) மாற்றம் செய்யலாம்.
10. ஃபிலிம் பெட்டி (Film empty can)
ஃபிலிம் பதிவு செய்யப்பட்டுவிட்ட பின்னர், ஃபிலிம் மாகஸினுள்ளிருந்து ஃபிலிம் பெட்டிக்கு மாற்றம் செய்துவிட்டு; அப்பெட்டியின் மூடியை சுற்றி ஒளிபுகாதவாறு டேப்பை வைத்து சீல் செய்ய வேண்டும்
காமிரா இயக்குவதற்கு மேலும் தேவைப்படும் இதர பொருட்கள்
டெய்லர் டேப் (Measuring Tape)
ஃபோகஸ் காமிராவிலிருந்து கதாபாத்திரங்களின் தூரத்தை அறிந்து லென்சில் ஃபோகஸ் நிர்ணயிப்பதற்கு உதவும்.
கத்திரிகோல் (Scissors)
திருப்புளி (Screw driver)
கறுப்புத்துணி (Black cloth)
வெள்ளை பென்சில் (White pencil)
ரப்பர் பேண்ட் (Rubber band)
மேற்கண்ட பொருட்களை வைக்க இதற்காகவே காமிரா பேக் (camera bag) தயாரிக்கப்படுகிறது.
அதில் பொருட்களை பெயர்ப் பட்டியலோடு வைத்துக் கொள்ளவேண்டும்.

சினிமாட்டோ கிராஃபி காமிரா


சினிமாட்டோ கிராஃபி காமிரா
சி. ஜெ. ராஜ்குமார் 

கேமராவின் அதி முக்கியமான பாகம் லென்ஸ். கான்கேவ் (concave) கான்வெக்ஸ் (convex) கண்ணாடி இணையும்போது லென்ஸ் ஆக உருவாக்கப்படுகிறது.
லென்சை காமிராவின் முன் பக்கம் பொருத்துவதற்கு தேவையான இணைப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்திற்கு மவுண்ட் (Mount) என்று பெயர்.
லென்ஸ் - இரண்டு முக்கியமான பணியைச் செய்கிறது. ஒன்று ஒளியை தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதற்கு அப்ரேச்சர் என்றொரு திறப்பு இதில் உண்டு. இதை அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் லென்ஸ் வழியாக செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
அப்ரேச்சர் ஒளி அளவை மதிப்பீடு செய்ய `T’ அல்லது `F’ என்கிறக் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகிறது. லென்சில் குறைந்த எண் இருந்தால் அதுவே அதிக வெளிச்சத்தை காமிராவில் செலுத்தும், அதே லென்சில் அப்ரேச்சரில் அதிக எண் இருந்தால் அதுவே குறைந்த வெளிச்சத்தை கேமிராவிற்கு அனுப்பும்.
உதாரணமாக லென்சில் உள்ள அப்ரேச்சர் எண்கள்:
F/1.8, F/2, F/2.8, F/4, F/5.6, F/8, F/11, F/16, F/22 ( இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்).
மேல் குறிப்பிட்ட எண்கள்– அதிக வெளிச்சத்தை அனுப்பும் குறைந்த ஒளியில் படமாக்க பயன்படுத்தப்படும் எண்.
F/22 குறைந்த அளவு வெளிச்சத்தை அனுப்பும். அதிக வெளிச்சம் இருந்தால் பயன்படுத்தப்படவேண்டிய எண் அளவு..
2) லென்ஸ் ஃபோக்கஸ் (focus) வளைவு உள்ளது அதை திருப்பினால் காமிராவில் வியுஃபைண்டர் வழியாக நாம் எந்த பொருளோ, பகுதியோ தெளிவாக பதிவு செய்ய வேண்டுமோ அப்பகுதி தெளிவாக பதிவு செய்யும் முக்கியமான ஒளிப்பணி ஃபோக்கஸ் ஆகும்.
லென்ஸ் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது, அதை மூன்று வகைகளாக பிரிக்கலாம்:
1) நார்மல் லென்ஸ் (Normal)
2) வைட் ஆங்கிள் லென்ஸ் (Wide Angle)
3) டெலி லென்ஸ் (Tele Lens)
நார்மல் லென்ஸ்
நார்மல் லென்ஸ் என்பது மனிதனுடைய கண்களில் உள்ள படியே இருக்கும் கவரேஜ் ஒட்டிய தொழில்நுட்பத்தோடு தயாரிக்கப்படுகிறது.
ஆங்கிள் கவரேஜ் - படமாக்கம் பரப்பு – 45டிகிரி
35 எம் எம் காமிராவுக்கு – 50 எம் எம் நார்மல் லென்ஸ்
வைட் ஆங்கிள் லென்ஸ்
இவ்வகை லென்ஸ் பயன்படுத்தப்படும்போது காட்சியின் பரப்பு விரிந்து காணப்படும். அதிகமான ஏளீயா கவரேஜ் செய்யும் வல்லமை வாய்ந்தது. ஆனால் நாம் படமாக்கும் இடமோ பொருளோ வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தும்போது அதனுடைய அளவு சுருக்கப்படும்.
35 எம் எம் காமிராவுக்கு – 40 எம் எம் , 32 எம் எம் , 24 எம் எம் , 20 எம் எம் , 15 எம் எம் ஆகியவை வைட் ஆங்கிள் லென்ஸ் படமாக்கும் பரப்பு 60 டிகிரி முதல் 120 டிகிரி வரை.
டெலி லென்ஸ்
டெலி லென்ஸ் பயன்படுத்தப்படும்போது அக்காட்சியில் உள்ள பொருளோ அல்லது படமாக்கும் இடமோ பெரிதாக (enlarged vision) பதிவாகும். வெகு தூரத்தில் இருக்கும் நடிகர்களோ, பொருளோ இருந்தாலும் அருகில் பார்ப்பது போல பதிவாகும் தன்மை வாய்ந்தது. ஆனாலும் காட்சியின் பரப்பு சுருங்கும் (narrow angle of vision).
35 எம் எம் காமிராவுக்கு :- 75 எம் எம், 100எம் எம் , 300 எம் எம், 400எம் எம் ஆகியவை டெலி லென்ஸ் ஆகும். படமாக்கும் பரப்பு – 30 டிகிரி – 4 டிகிரி வரை.
ஜும் லென்ஸ் (Zoom Lens)
ஜும் லென்ஸ் - வாரி ஃபோகல் லென்ஸ் (Vari focal lens) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பல லென்ஸ் செயல்பாடுகள் இணைந்தது தான் இதனுடைய தனிச்சிறப்பு ஒரே லென்சில் வைட் ஆங்கிள், நார்மல் மற்றும் டெலி லென்ஸ் இணைந்தே இருப்பது தான் ஜும் லென்ஸ். சில சமயம் நார்மல் லென்சிலிருந்து டெலி லென்சாகவும் இருக்கும்.
திரைப்படத்தில் (ஜும் லென்ஸ்) மூலமாக காமிரா அசைவுகள் வடிவமைக்கப்படுகிறது.
1) Zoom in - ஜும் இன்
2) Zoom Out - ஜும் அவுட்
Zoom in :- குறிப்பிட்ட கதாபாத்திரமோ இடமோ நோக்கி செல்வது.
Zoom Out : - குறிப்பிட்ட இடத்திலிருந்து விலகி அகல பார்வைக்கு வருவது.
சினிமாவில் பயன்படுத்தப்படும் சில பிரபலமான லென்ஸ் வகைகள்:
35 எம் எம் வடிவமைப்புக்கு :- கார்ல் ஜீஸ் (Carl zeiss) உபயோகப்படுத்தும், அல்ட்ரா ஃபைரம் (Ultra prime) லென்ஸ் கம்பெனியின் பெயர், குக் (Cooke).
சினிமாஸ்கோப் - வடிவத்திற்கு உட்படும் அனைத்து தயாரிப்பு லென்ஸ்கள் அன மார்ப்பிக் (Anamorphic) என்ற தொழில்நுட்ப வடிவுடன் தயாரிக்கப்படுகிறது.
கோவா (Kowa) லென்ஸ்
சினிவிஷன் (Cinevision) லென்ஸ்
எலைட் (Elite)
ஆஃக் (Hawk)

சினிமாட்டோ கிராஃபி காமிரா


சினிமாட்டோ கிராஃபி காமிரா
சி. ஜெ. ராஜ்குமார் 

சினிமாக்கலையின் அசையும் காட்சிகளை பதிவு செய்யும் கருவியை சினிமாட்டோ கிராஃப் காமிரா (Cinematograph Camera) பிலிம் காமிரா (Film Camera) என்று அழைக்கப்படுகிறது.
பிலிம் காமிரா அசைவுகளை தொடர் நிழற்படங்களாகவே (Serious of Images) பதிவு செய்யப்படுகிறது.
காமிராவின் முக்கிய பாகங்கள்:

1) பிலிம் மகசின் (Film Magazine)
2) காமிரா அறை (Camera Body)
3) லென்ஸ் (Lens)
4) வியு ஃபைன்டர் (View Finder)
5) டிரைவ் (Drive)
6) மெட் பாக்ஸ் (Matte Box)
பிலிம் காமிராவில் பயணிக்கும் முறை தொடர்ந்து செல்வது போல நமக்கு தோன்றினாலும் பிலிம் பயணிக்கும் தன்மையை நின்று செல்லும் முறை என்று அழைக்கப்படுகிறது. இதை இன்டர்மிடன்ட் மோஷன் என்று அழைக்கப்படுகிறது.
இன்று நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் வசன உச்சரிப்பு முறைக்கு 1 நொடியில் 24 ப்ரேம்கள் பதிவு செய்கிறது. அந்த 24 ப்ரேம்கள் ஒவ்வொன்றும் பிலிம் கேட் என்ற இடத்தில் கனநொடியில் நின்று விட்டு தான் காட்சியை பதிவு செய்துவிட்டு பின் நகர்கிறது.
பிலிம் மகசின்:
காமிராவுக்கு வெளியே இருக்கும் பிலிம் மகசின் - ஒளி புகாதவாறு அதன் உள்ளே இரண்டு அறைகள் கொண்டது. ஒன்று டேக் - ஆப் (Take-Off) இன்னொன்று டேக் அப் (Take-up) உள்ளே பதிவு செய்யப்படாத (Unexposed) பிலிமை டேக் ஆஃப் (Take-Off) அறையில் வைத்து பிலிம் நுணியை அடுத்த அறையான டேக் அப் சொருக வேண்டும், இங்கே தான் பதிவு செய்யப்பட்ட பிலிம் தங்கும் இடம்.
பிலிம் மகசின் கீழே சுழற்சிப்போல உள்ள பிலிமை மகசின்னோடு காமிரா அறையில் செலுத்த வேண்டும்.
காமிரா அறை:
பிலிம்மானது காமிரா அறையில் உள்ளே சுழல வசதியாக ரோலர்களும் மற்றும் ப்ரேம் நகர கோக்கிகள் உள்ளது. காமிரா அறையில் பிலிம்கேட் என்னும் இடத்தில் நின்று காட்சிகள் பதிவாகும். பிலிம் கோக்கி மூலமாக இழுக்கப்பட்டு பிலிம்கேட்டில் நிற்கும்போது பிலிம் அதிர்வுகள் இல்லாமல் இருக்க அச்சமயத்தில் பிலிம்மில் உள்ள துவாரத்தில் ரேஜிஸ்டிரேஷன் பின் இயங்கி, பிலிம் நகரும்போது விடுவித்துக்கொள்ளும்.
காமிரா அறையில் பிலிம் பிலிம்கேட்டில் நின்று பதிவாகும் அதே நேரத்தில் காமிரா சட்டர் திறந்தே இருக்கும் பிலிம் அவ்விடத்தை விட்டு நகரும்போது சட்டர் ஒளியை பிலிம்மில் பதிவாகாதவாறு மூடிக்கொள்ளும். ஆகையால் ஒவ்வொரு ப்ரேம்முக்கும் அடுத்தற்கும் ஓர் கறுப்புக்கோடு இருக்கும்.
வியு ஃபைன்டர்:
காட்சிகளை பதிவு செய்யப்படும் முன்னும் செய்யும்போதும் காமிரா வாயிலாக நம் கண்கள் பார்க்கப்படும் பாகம்தான் வியு ஃபைன்டர். காமிரா பெட்டி இடது புறத்தில் அமைந்திருக்கும். வியு ஃபைன்டர் பார்க்கும்போது செவ்வகத்திரை போல இருக்கும். அதிலிருந்துதான் லென்ஸ் மூலமாக போகஸ் செய்வதும், காட்சிகளை பதிவு செய்வதற்கு வியு ஃபைன்டர் மூலமாகவே தான் பார்த்து காமிரா இயக்கப்படுகிறது.
இன்று பெரும்பான்மையான நவீன காமிராக்கள் ரிப்லக்ஸ் வியுஃபைன்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.
காமிராவில் உள்ள சட்டர் கண்ணாடித் தன்மையுடன் 45 டிகிரி ஒளி புகும் பாதையில் பிலிம்மிற்கு முன் வைக்கப்பட்டு அதிலிருந்து நிறப்பிரிகை மூலமாக வியுஃபைன்டரில் காட்சிகள் தெரிய வருகிறது.
டிரைவ் (இயக்கம்):
காமிரா மோட்டார் 12 வோல்ட்டிலிருந்து 24 வோல்ட் மின் சக்தியில் இயக்கப்படுகிறது.
மெட்டி பாக்ஸ் (Matte Box)
லென்ஸ் முன்னர் பில்டர் பொருத்துவதற்கும், லென்ஸ் மீது ஒளிச்சிதறல் ஏற்படாமல் தடுக்கவும் மெட்டி பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
காமிராவும் திரையிடப்படும் முறைகளும்:
இன்று 35 எம் எம், சூப்பர் 35 எம் எம், 16 எம் எம், சூப்பர் 16, சினிமாஸ்கோப், 70 எம் எம் ஆகிய முறைகளில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
35 எம் எம்
35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது.
16 எம் எம்
16 எம் எம் காமிராவும் 16 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது
சினிமாஸ்கோப் (அகன்ற திரை)
அகன்ற திரை முறையான சினிமாஸ்கோப்பிற்கு 35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது. கூடவே அகன்றதிரை முறைக்கு அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அனமார்ஃபிக் லென்ஸ் அகன்ற பார்வையை 35 எம்எம் பிலிம்மில் சுருக்கி பதிவு செய்யும் தன்மைக் கொண்டது.
தியேட்டரில் அனமார்ஃபிக் லென்ஸ் பொருத்தப்பட்ட திரையிடும் கருவியில் திரையிடும்போது சுருக்கப்பட்ட காட்சி அகன்ற பார்வை கொண்ட காட்சியாக விரிந்து திரை முழுவதும் ஆக்கிரமித்து திரையிடப்படுகிறது.
70 எம் எம் 
இந்த அகன்ற திரைவடிவ முறைக்கு 65 எம் எம் காமிராவும் 65 எம் எம் பிலிமும் பயன்படுத்தப்படுகிறது.
சூப்பர் 16 
சூப்பர் 16 வகை காமிராக்களில் 16 எம் எம் பிலிமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் அகன்ற திரை வடிவில் திரையிடுதல் முறைக்கு ஏற்றவாறு காமிராவில் பிலிம் கேட்டில் சில மாறுதல் செய்யப்படுகிறது. இம்முறையில் 16 எம்எம் முறையில் பதிவு செய்யப்பட்டாலும் லாப்பில் அகன்ற வடிவில் பிரிண்டிங் செய்யப்படும்
சூப்பர் 35 எம் எம் 
இன்று பல ஒளிப்பதிவாளர்கள் மிகவும் விரும்பும் ஒளிப்பதிவு முறை சூப்பர் 35 எம் எம் அகன்ற திரை வடிவத்திற்கு சினிமாஸ்கோப் போல அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்பட வேண்டியதில்லை. சூப்பர் 35 எம் எம் முறையில் குறுகிய அறைகளில் கூட சிறப்பாக இமேஜ் கம்போஸ் செய்ய முடியும். ஸ்பேரிகல் லென்ஸ் பயன்படுத்தப்படுவது, சூப்பர் 35 எம் எம் காமிராவில் அகன்ற வடிவத்திற்கு ஏற்ப பிலிம் கேட் மாறுதல் செய்யப்பட்டு 35 எம் எம் பிலிம், பதிவு செய்யப்பட்ட பின் டிஜிட்டல் நிறத் தேர்வு முறையில் அகன்ற வடிவத்திற்கு பிரிண்ட் செய்யும் நவீன முறை இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.
இந்தியாவில் பிரபலமாக நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் ஆரிஃப்பலக்ஸ் (ARRIFlex) ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு
35 எம்எம் காமிராக்கள்:
ஆரி (ARRI) III
ஆரி (ARRI) BL4
ஆரி (ARRI) 435
ஆரி (ARRI) 235
ஆரி (ARRI) 535
16 எம் எம் காமிராக்கள்:
ஆரி (ARRI) 16 SR 2
ஆரி (ARRI) 16 SR3
ஆரி (ARRI) 416
 

கலர் டெம்பரேச்சர் மற்றும் ஃபிலிம் வகைகள்


கலர் டெம்பரேச்சர் மற்றும் ஃபிலிம் வகைகள்
சி. ஜெ. ராஜ்குமார் 

ஃபிலிம் பல ஸ்பீட் A.S.A (American Standards Association) களில் தயாரிக்கப்பட்டாலும் அனைத்து ஸ்பீட் வகைகளிலும் இரண்டு முக்கிய டெம்பரேச்சர்களில் தாயாரிக்கப்பட்டு வருகிறது.
‘T’ ஃபிலிம் மற்றொன்று ‘D’ ஃபிலிம்
‘T’ என்றால் -டங்க்ஸ்டன் (Tungsten) ஃபிலிம்
‘D’ என்றால் -டேலைட் (Day Light) ஃபிலிம்
டேலைட் (D) வகையானது பகல் வெளிச்ச வெப்பத்திற்கு உட்பட்டது.
டங்க்ஸ்டன (T) வகையானது இரவு அல்லது வீட்டில் உள்ளே பயன்படும.
உதாரணத்திற்கு:
குண்டு பல்ப் வெப்பத்திற்கு உட்பட்டது.
ஃபிலிம் தயாரிப்பில் இவ்விரு Kelvin (டிகிரி கெல்வின்) கலர் டெம்பரேச்சர் வெப்பத்திற்கு தயாரிக்கப்படுகிறது.
கலர் டெம்பரேச்சர் எப்படி அறியப்படுகிறது என்றால்?
ஓளிப்படக்கலை ஆய்வாளர்கள் ஒரு இரும்புத்துண்டை(Blackrod) சூடாக்கிக்கொண்டே இருக்கும் போது வெப்பத்தின் அளவு (Kelvin) அதிகரித்துக்கொண்டிருக்கும். அப்போது கருப்பு இரும்புத்துண்டு மெல்ல நிறம் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டு வெப்பத்திற்கு நிறத்தன்மைக்கும் இருக்கும் தொடர்பினை அறிந்தனர்.
பின்னர் கருப்பு (Blackrod) நிறத்துண்டானது சூடாக சூடாக சிகப்பு நிறமாகவும் மஞ்சளாகவும் ஆரஞ்சு நிறமாகவும் மற்றும் நீல நிறமாகவும் மிகுந்த வெப்பத்தில் மாறும் வெந்நிறத்தோற்றத்தை கண்டு பிடித்து இதற்கு ஒரு வரையறை ஒன்றை ஏற்படுத்தினர்.
அதை கலர் டெம்பரேச்சர( Color Temperature) என்றும் அதை அளவிட டிகிரி கெல்வின் (Kelvin) முறையைப் பயன்படுத்தினர்
கலர் டெம்பரேச்சர் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரித்தனர்:
1. பகல் வெளிச்ச்த்தை -5500K டிகிரி கெல்வின் (ஐந்து ஆயிரத்து ஐநூறு டிகிரி கெல்வின்) என்றும்
2. டங்க்ஸ்டன் செயற்கை ஒளியை -3200K டிகிரி கெல்வின் (மூவாயிரத்து இருநூறு டிகிரி கெல்வின்(Tungsten) என்றும் வகைப்படுத்தினர்.
ஒளிப்படக்கலை ஆரம்பத்தில் புகைப்படம் மற்றும் சினிமா ஒளிப்பதிவு செய்ய இரண்டு முக்கிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி பதிவு செய்தனர்.
ஓன்று இயற்கை ஒளி சூரிய வெளிச்சம்-5500டிகிரி கெல்வின் , மற்றொன்று செயற்கை ஒளி அன்று பெரும்பாலான வெளிச்ச கருவிகளில் (Light) உள்ள பல்புகளில் டங்க்ஸ்டன் ஃபிலமெண்ட் ( Tungsten Filament ) டை பயன்படுத்தினர் (-3200டிகிரி கெல்வின்).

பின்னர், இன்று பார்த்தால் டியூப்லைட் பல வெளிச்ச கருவிகள் (Tube Light) அன்றாட வாழ்க்கையிலும் சினிமாவிலும் வந்துள்ளது. ஆதலால் ஃபிலிம் தயாரிப்பில் இன்றுவரை இரண்டு கலர் டெம்பரேச்சரில் தயாரிக்கின்றனர். ஓன்று ‘D’ என்ற டேலைட் (Daylight) அடுத்து 'T' என்ற டங்க்ஸ்டன் (Tungsten). சினிமா ஒளிப்பதிவுத்துறையில் பயன்படுத்தப்படும் வெளிச்ச கருவிகளும் (Lights) இவ்விரு கலர் டெம்பரேச்சர்களுக்கு ஏற்ப இருவகையான லைட் கருவிகளும் இருக்கின்றன.
ஃபிலிமில் ஸ்பீட் உடன் ’T’ அல்லது ’D’ என்ற முத்திரை இருக்கும்.
உதாரணத்திற்கு:
100 T நூறு ASA ஸ்பீடில் lq;f;];ld; வகையான ஃபிலிம்
ASA 100 D நூறு ஸ்பீடில் டேலைட் (பகல் வெளிச்ச) வகையான ஃபிலிம்
ASA பயன்பாடு
டங்க்ஸ்டன் (Tungsten) தன்மையுடைய ‘T ’ ஃபிலிமை பயன்படுத்தும் போது அதற்கேற்ப டங்க்ஸ்டன் வெப்பத்தன்மையுடைய வெளிச்சத்தைப்பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பும் சரியான நிறத்தன்மை, (Natural tone) நேச்சுரல் டோன் கிடைக்கும்.

டங்க்ஸ்டன் ’T’ ஃபிலிமை பய்னபடுத்தி டங்க்ஸ்டன் வெளிச்ச கருவிகளை பயன்படுத்தாமல் வேறு வெளிச்சத்தன்மையுடைய லைட் (Lights) கருவிகளை பயன்படுத்தினால் சரியான நிறத்தன்மை கிடைக்காமல் வேறு நிறம் பதிவு செய்யப்பட்டுவிடும்.
கீழே உள்ள அட்டவணை முலம் ’T’ ’D’ ஃபிலிமுக்கு எந்த வெளிச்சம் பயன்படுத்தினால் என்ன நிறத்தன்மை கிடைக்கும் அதை சரி செய்ய காமிராவில் என்ன பில்டர் (Filter) பயன்படுத்தி சரியான நிறத்தன்மை பெறலாம் என்பதை அறிவோம்.

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தீர்கள் என்றால் காமிராவில் டங்க்ஸ்டன் (T) ஃபிலிம் பயன்படுத்தி முதல் கட்டத்தை நோக்கி டங்க்ஸ்டன் வெளிச்சத்தை பயன்படுத்தினர். சரியான நிறத்தன்மை (Natural tone) கிடைக்கும்.
இரண்டாவது கட்டத்தை பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் படமாக்கும் போது பதிவு செய்யப்பட்ட படம் முழுக்க நீலத்தன்மை வந்து விடும். இதை சரி செய்ய அதாவது காமிராவில் டங்க்ஸ்டன் ஃபிலிமை பயன்படுத்தி சூரிய வெளிச்சத்திலோ அல்லது அதன் சார்புடைய வெளிச்ச கருவிகளை கொண்ட லைட் ( Light) பயன்படுத்தி படமாக்கும் போது அந்த நீலநிறத்தன்மையை சரி செய்ய சொல்லப்பட்ட பில்டர் 85 (Filter 85 ) படமாக்கும் போதே காமிராவின் லென்ஸ் முன்னர் அப்பில்டர் (Filter) பயன்படுத்தினால் நீலத்தன்மை போக்கி சரியான நிறம் வந்து விடும்.
மேலே உள்ள அட்டவணையைப்பார்த்தால் டேலைட் (D) ஃபிலிம் சூரிய பகல் வெளிச்சத்தன்மைக் கொண்ட ஃபிலிமைக் காமிராவில் பயன்படுத்தும் போது இயற்கை ஒளியில் சூரிய ஒளியாலோ அல்லது சூரிய ஒளித்தன்மையுடைய லைட் (Light) பயன்படுத்தினால் சரியான நிறத்தன்மை (Natural Tone) கிடைக்கும். ஆனால் டேலைட் ஃபிலிம் (Day Light Film) காமிராவில் பயன்படுத்தி டங்க்ஸ்டன் ஒளி (Tungsten Light) காட்சிகளை பதிவு செய்தால் அப்பதிவில் மஞ்சள் நிறமாக மொத்த படம் இருக்கும். இதை சரி செய்ய வேண்டும் என்றால் காமிராவில் டேலைட் ஃபிலிம் இருந்து டங்க்ஸ்டன் ஒளியில் படமாக்கும் போது காமிரா லென்ஸ் முன்னர் ஃபில்டர் எண் 80 (Filter no 80) பயன்படுத்தினால் மீண்டும் சரியான நிறத்தன்மைக்கிடைக்கும்.

பில்டர் (Filter)
பில்டர் என்றால் அதன் பெயருக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒளியை மட்டுமே வடிகட்டி அவ்வொளியை லென்சுக்குள் அனுப்புவதே பில்டர் (Filter) வேலை. கண்ணாடி போல் உள்ள பில்டர் வட்டமாகவோ அல்லது உருண்டை வடிவத்தில் தயாரிக்கப்படும் பில்டர் லென்ஸ் முன்னர் வைத்து பயன்படுத்தப்படும்.
பில்டர்கள் ஒளிப்பதிவாளரின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. பில்டர்கள் நிறத்தன்மையை மாற்றுவதற்கும் (Color Filters) உருவம் பல உருவமாய் மாற்றுவதற்கும் மல்டி இமேஐ பில்டர் ( Multi Image Filters ) பயன்படுத்தப்படுகிறது. சாப்ட் பில்டர் (Soft Filters) படமாக்கும் முகமோ அல்லது இடமோ மென்மையாகத்தெரியவைக்க உதவுகிறது.
பில்டர் (Filters)
பில்டர் கண்ணாடியில் ஒளி புகும் தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது. காமிரா லென்ஸ் (Camara lens) முன்னர் வைத்து உபகோகிக்கப்படும் பில்டரானது ஒளியின் தன்மையை மாற்றி அமைக்கும் தன்மை வாய்ந்தது.
ஓளிமாற்றம் அடையும் போது ஒளிப்படத்தின் இமேஐ மெருகேற்றப்படுவதே பில்டர்களின் முக்கிய செயல் பில்டர்கள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஓவ்வொரு பில்டர்கள் ஒவ்வொரு குணாதிசியங்களை கொண்டது. சில பில்டர்கள் நிறத்தன்மை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது. ஓளியின் அளவை குறைக்கும் பில்டர்கள் காண்ராஸ்ட் (Contrast) ஒளிப்படத்தில் கருநிறப்பகுதியும் வெளிச்சப்பகுதிகள் உள்ள வேறுபாடு இவ்வேறுபாட்டை மாற்றி அமைக்கும் காண்டராஸ்ட் பில்டர்கள் இப்படி பல வகையான பில்டர்கள் உள்ளன.
Natural Density Filter (N.D) நேச்சுரல்டென்சிட்டி பில்டர்
என.டி (N.D) என்று அழைக்கப்படும் ஒளியை குறைக்கும் பணியைச்செய்கிறது.
ஓளியைக்குறைக்கும் போது நிறத்தன்மையில் எந்த மாற்றமும் அடையாமல் செய்வதுதான் இவ்வகை பில்டர்களின் சிறப்பு.
என்.டி (N.D) பில்டர்கள் மூன்று வகைகளாக உள்ளது.
ND3 என்.டி3 1STOPS
ND6 என்.டி6 2STOPS
ND9 என்.டி9 3STOPS
என்.டி-3 பில்டர் 1STOPS (பகுதி) ஒரு பகுதி வெளிச்சத்தைக்குறைக்கிறது
என்.டி-6 பில்டர் 2STOPS இரண்டு பகுதி வெளிச்சத்தைக் குறைக்கிறது.
ஏன்.டி-9 பில்டர் 3STOPS மூன்று பகுதி வெளிச்சத்தைக்குறைக்கிறது.
போலரைசர் (Polarizer)
வெளிச்சக்கதிர்களானது பல வழிகளில் பிரிவடைந்து செல்கிறது. வெளிச்ச கதிர்களானதை போலரைசர் பில்டர் வழியாகச்சென்றால் ஒரே பாதையில் செல்லும் தன்மை பெற்றுள்ளது.
காமிரா லென்ஸ் முன்னர் போலரைசர் பில்டர் பொருத்தினால் நாம் தண்ணீர், கண்ணாடி போன்றவற்றிலிருந்து ஏற்படும் ஒளிச்சிதறல் (Glar) அகற்றி தெளிவான பிம்பத்தை பதிவு செய்யலாம். சில பாத்திரங்களில் அல்லது பெயிண்டிலிருந்து ஒளிச்சிதறல் ஏற்பட்டு தெளிவல்லாத இமேஐ கிடைக்க வாய்ப்புண்டு அச்சமயங்களில் போலரைசர் பயன்படுத்தினால் தெளிவான படம் பதிவாகும்.
சில குறிப்பிட்ட நேரங்களில் போலரைசர் பயன்படுத்தினால் கூடுதல் நிறத்தன்மை கிடைக்கும். பகல் நேரங்களில் குறிப்பிட்ட கோணத்தில் போலரைசர் பில்டர் வைத்து பதிவு செய்தால் வானம் நல்ல நிறமாக மாற்றம் ஏற்படும்.
ஸாஃப்ட் பில்டர் (Soft Filter)
ஸாஃப்ட் பில்டரானது மென்மையான ஒளிப்படத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. நடிப்பவர்கள் முகத்தில் உள்ள கோடுகள் போன்றவற்றை அகற்றி அழகாக்கும் தன்மைக்கொண்டது. இவ்வகைப்பில்டர்களை ஒளிப்பதிவாளர்கள் க்ளோசப் ( Close-Up) காட்சிக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்துவது வழக்கும்.

பில்டர் குறியீடு (Filter factor)
பில்டரை காமிரா லென்ஸ் முன் பயன்படுத்தும் போது ஒளியின் அளவு குறைகிறது. ஆதலால் லென்ஸ் உள்ள அப்பேரசர் (Aperature) மூலமாக ஒளியின் அளவை கூட்டவேண்டும். எவ்வளவு ஒளி குறைந்துள்ளது? எவ்வளவு ஒளி கூட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க பில்டர் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
பில்டர் குறியீடு பில்டரின் தன்மைக்கு ஏற்ப 1.2.3.4.5.6 என்று அமைக்கப்பட்டுள்ளது.
பில்டர் குறியீடு 1.5 என்றால் பகுதி (1/2 Stops) ஒளியை லென்ஸ் உள்ள அப்பரேச்சர் அதிகரிக்க ஒளியின் அளவை அதிகரிக்க வேண்டும.
வண்ண ஒளிப்பதிவிற்கு

பில்டர் வகை
(Filter No)
அதன் பயன்கள்

80A D ஃபிலிம் பயன்படுத்தும் போது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3200 டிகிரி கேல்வின் தன்மை மாற்றுவது
80B D ஃபிலிம் பயன்படுத்தும் போது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3400டிகிரி கேல்வின் தன்மை மாற்றுவது.
81B மஞ்சள் நிறத்தன்மைக்கு (Yellowish)
82B அடர்த்தியான மஞ்சள் நிறத்தன்மைக்கு (more warming than 81)
குளிர்ச்சியான நிறத்தன்மைக்கு
85 'T' டங்ஸ்டன் ஃபிலிம் பயன்படுத்தி சூரிய ஒளிக்கு 5500 டிகிரி கெல்வின் தன்மை மாற்றுவது
FLB டியூப்லைட் வெளிச்சத்தில் (Fluorescent) படமாக்கும் போது வரும்
நீல-பச்சை நிறத்தை அகற்றுவதற்கு
Netural Density (N.D) அதிக ஸ்பீடு பயன்படுத்தும் (High Speed) போது எந்த நிறமாற்றமும் இல்லாமல் அதிக வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த
CORAL மிதமான சிகப்பு நிறத்தன்மைக்கு கதாபாத்திரங்களின் (Skin Tone)
கூடுதல் நிறத்தன்மைக்கு
FOG பனிமூட்டம் போல ஒளிப்படத்தன்மைக்கு
HAZE மலைப்பகுதிகளில் படமாக்கம் போது உருவாகும் அதிக
நீலநிறத்தை கட்டுப்படுத்த

பிலிம் உருவான சரித்திரம்


பிலிம் உருவான சரித்திரம்:
சி. ஜெ. ராஜ்குமார் 

1727ஆம் ஆண்டில் திரு.ஜொஹன் ஹென்ரிச் ஸ்கல்ஜ் (Johan Henrich schulze) ஜெர்மன் மருத்துவரான அவர் லாப்பில் (டab) சில்வர் (silver), நைட்ரிக் ஆஸிட் (nitric acid), சால்க்பவுடர் (chalk powder) ஆகியவற்றை ஒரு மூடியில் வைத்து சில்வர்நைட்ரேட் (silver nitrate) உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது, அக்கலவை மீது சூரிய ஒளி படர அக்கலவை வெள்ளை நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாற்றம் கண்டதைப் பார்த்து அதிசயித்த ஜொஹன், உடனடியாக சில ‘கட்வுட்’ (cut-out) செய்து எழுத்துக்களை ‘மூடி’ முன்னர் வைத்து அக்கலவையை பூசி வெளிச்சத்தைப் பாய்ச்ச, அதிசயம் நிகழ்ந்தது. மூடியில் (flask) முன்னர் இருந்த கட்வுட் எழுத்துகள் தெளிவாக மூடியில் பதிவாகியிருந்தது. ஒளிப்படக்கலையின் தோற்றத்தின் முக்கிய கட்டமாக இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், மேலும் 100 ஆண்டுகளுக்கு இக்கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படவில்லை.
பின்னர் 1839 லீயிஸ் டாக்ரே (Louis daguerre) பிரன்ச் ஓவியரான இவர் ‘சில்வர் நைட்ரேட்’ கலவையை ஒரு ‘செப்புத்தகடில்’ பூசி ஒளி படும்படி செய்து ஒளிப்படத்தை ‘செப்புத்தகடில்’ உருவாக்கினார். இதை (wet plate process) வெட் பிளேட் பிராசஸ் என்று கூறினர். பிறகு வில்லியம் பாக்ஸ் தால்பொட் (william Henry Fox Talbot) ‘சில்வர்’ ரசாயனத்தை தகடிற்கு பதிலாக காகிதத்தில் பூசினார். இதன் மூலம் எடுத்த ஒளிப்படத்தை ‘Beautiful picture’ ‘அழகான படம்’ என்று அழைத்தார்.
1889ஆம் ஆண்டில் ஃபிலிம்க்கான முதல் விஞ்ஞான கட்டத்தை ஜார்ஜ் ஈஸ்ட்மென் (George Eastman) உருவாக்கினார். அவர் ‘சில்வர் நைட்ரேட்’ ரசாயனத்தை காகிதத்திற்குப் பதிலாக கண்ணாடி போல உள்ள ஃபிலிம் என்னும் தளத்தில் பூசி உலகம் முழுவதிலும் இன்று வரை பிரபலமாக இருக்கும் கோடாக் என்னும் நிறுவனத்தின் மூலமாக ஃபிலிம் கண்டுபிடிப்பை உணர்த்தி வெற்றி பெற்றார். இங்குதான் புகைப்படக்கலை மற்றும் சினிமாவின் வளர்ச்சி வேகமடைந்தது. 1889ஆம் ஆண்டு ஃபிலிம் கண்டுபிடித்த அந்த வருடத்தில் கோடாக் காமிரா அறிமுகப்படுத்தப்பட்டது.
ஃபிலிம் (film) 
ஒளிப்படக்கலை (photographic) ஃபிலிமானது இரசாயன மாற்றம் ஏற்படும் தன்மையுள்ளது. அம்மாற்றம் ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. முறையாக ஃபிலிமைக் கேமராவில் செலுத்தி, நாம் படமெடுக்கும் உருவத்திலிருந்தோ அல்லது இடத்திலிருந்தோ வரும் ஒளியை லென்ஸ் வழியாக காமிராவிற்குள் செலுத்தும்போது அவ்வொளி ஃபோக்கஸ் (focus) செய்யப்பட்டு, சில சமயம் (subject ) சிறிதாக்கவோ அல்லது பெரிதாக்கவோ லென்ஸ் மூலமாக தீர்மானிக்கப்பட்டு காமிராவில் உள்ள சட்டர் (shutter) திறக்க ஒளி ஃபிலிமிற்குச் சென்று பதிவாகிறது. பதிவான அந்த இமேஜ் (image) ‘லெடன்ட் இமேஜ்’ (latent image) என்று அறியப்படுகிறது. பிறகு ஃபிலிமை இரசாயனத்தால் கழுவும் முறை டெவலப்பிங் (developing) என்று அழைக்கப்படுகிறது. டெவலப் செய்த படம் நெகடிவ் (negative) ஆகிறது.
நாம் படமாக்கிய வெளிச்சப்பகுதி இருண்டதாகவும், இருண்டபகுதி வெளிச்சமாகவும் நெகட்டிவில் இருக்கும். நிறத்தன்மையும் அப்படியே நேர் எதிராக பதிவாகி இருக்கும். நெகடிவை மேலும் (film paper) ஃபிலிம் காகிதத்தில் பாசிடிவ் (positive) படமாக செய்யப்படுகிறது.
ஃபிலிம் உருவாக்கம்:
ஃபிலிம் = இரசாயன மாற்றம் தரும் வேதியியல் பொருள் ‘இமல்சன்’ (Emulsion) என்று அழைக்கப்படுகிறது. இரசாயனக் கலவையான ‘இமல்சன்’ ஒரு ப்ளாஸ்டிக் (plastic) தன்மையுடைய மிக மெலிதாக உள்ள தளத்தில் (Base) பூசப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இமல்சன் மற்றும் தளம் எப்படி உருவாக்கப்படுகிறது என்று கீழ்கண்ட வழிகளில் அறிவோம்.
கலர் பிலிம்க்கான வரைபடம்

ஆன்ட்டி ஹலேசன் : (Anti halation)
இப்பகுதியானது ஒளி இரு பக்கங்களிலிருந்து ஃபிலிமுக்கு வராமல் ஒரே பக்கத்திலிருந்து வருவதற்காக உருவாக்கப்பட்ட பகுதி.
நடுப்பகுதி : (Inter layer)
ஒரு வண்ணப் பகுதிக்கும் அடுத்த வண்ணப் பகுதிக்கும் சிறு இடைவெளியை உருவாக்குவதே நடுப்பகுதியின் செயல்.
தளம் : (film base)
ஃபிலிம் தளமானது மிக மிக மெலிதாக தயாரிக்கப்படுகிறது. அதனுடைய அளவு 1/10000 இன்ச். ப்ளாஸ்டிக் போன்று உள்ள இத்தளம் மரத்தின் கலவையிலிருந்து (wooden pulp) தயாரிக்கப்படுகிறது. இதன்மீதுதான் இரசாயணக் கலவையான இமல்சன் பூசப்படுகிறது.
இமல்சன் தயாரிப்பு :
சில்வர் என்ற வேதியியல் பொருள் நைட்ரிக் ஆசிடில் கலக்கப்படுகிறது. அது கரைந்த பின் குளிர்படுத்தி சில்வர் நைட்ரேட் பொடிகளாக (silver nitrate crystals ) மாற்றப்படுகிறது. அது சில்வர் நைட்ரேட் பசைபோல உள்ள ஜெலடினில் (Gelatin ) கலக்கப்பட்டு ஒளிமாற்றம் தரும் ரசாயன கலவையாக தயாரிக்கப்படுகிறது. இமல்சன் ஆக தயாரிக்கப்பட்ட கலவை ஃபிலிம் தளத்தில் மூன்று முறை சீராக பூசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணம் இமல்சனோடு “சிவப்பு, பச்சை, நீலம்” நிறத்தில் கவனமாகப் பதிக்கப்படுகிறது.
ரசாயனக் (Emulsion) கலவை தயாரிப்பு


ஃபிலிம் துவாரம் : (perforation)
வண்ண ஃபிலிம் உருவான பிற்பாடு அதன் இருபுறத்தில் துவாரங்கள் போடப்படும். இத்துவாரத்தை பெர்போரசின் (perforation) என்பார்கள். அது ஃபிலிம் காமிராவில் சூழல் வசதிக்காக செய்யப்படுகிறது.
ஃபிலிம் செயல்திறன் : (film speed)
ஃபிலிம் செயல்திறனை நிர்ணயிப்பது இமல்சனில் உள்ள புள்ளிகள்தான். துணியில் உள்ள நூல் போல பிலிமில் உள்ள புள்ளி அதன் தன்மையை உணரப் பயன்படுகிறது. புள்ளியின் அளவு பெரிதாகப் பெரிதாக ஃபிலிமானது அதன் வேகத்தை (ஸ்பீடை) அதிகரிக்கிறது. செயல்திறனும் அதிகரிக்கிறது. ஆதலால் குறைந்த வெளிச்சத்தில் கூட படமாக்கும் தன்மை அடைகிறது. ஆனால் இரசாயனப் புள்ளி அளவு சிறியதாக இருந்தால் அதிக வெளிச்சம் தேவைப்பட்டாலும், நிறத்தன்மை சிறப்பாக இருக்கும். புள்ளியின் அளவு பெரியதாக இருந்தால் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த படமாக்கப்பட்டாலும் , நிறத்தன்மை கொஞ்சம் குறைந்த செயல்திறனிலேயே இருக்கும்.
ஃபிலிமின் ஒளிமாற்றம் ஏற்படும் வேகத்தை ஃபிலிம் ஸ்பீட் (flim speed) என்பார்கள். அதை A.S.A - American Standard Association தீர்மானிக்கிறது.
ஃபிலிமின் செயல்திறன் பல அளவுகோல்களாக கூறப்படுவதுண்டு.
50 A.S.A
100 A.S.A
200 A.S.A
250 A.S.A
500 A.S.A
50 A.S.A slow speed film - (ஒளி குறைந்த வேகத்தில் ஏற்படும் மாற்றம்)
- அதிக வெளிச்சத்தில் படமாக்கப்பட வேண்டும்.
- மிகச்சிறப்பான நிறத்தன்மை.
- வெளிப்புறக் காட்சிகளுக்கு ஏற்றது.
100 A.S.A - 200 A.S.A - Medium speed flim
- மத்திய அளவு
- நல்ல நிறத்தன்மை. வெளிப்புறக் காட்சிகளுக்கும், உட்புறக்
காட்சிகளுக்கும ஏற்றது.
250 A.S.A - 500 A.S.A - High speed flim (அதிவேக ஃபிலிம்)
- குறைந்த வெளிச்சத்தில் படமாக்கப்படும் திறன் கொண்டது.
- ஓரளவு சிறந்த நிறத்தன்மை.
- இரவு / பகல் உட்புறக் காட்சிகளுக்கு ஏற்றது.
ஃபிலிம் வகைகள் ஒளிப்பதிவாளர்கள் அவர்களுடைய ரசனை / அனுபவத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள்.
ஃபிலிம் அதன் வகை சார்ந்து ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வகைக்கு வெவ்வேறு நிறத்தன்மை, வெளிச்சபகுதி / இருண்ட பகுதியின் அடர்த்தி, ஒளி நிர்ணயிக்கும் திறன். இக்குணாதிசயங்களை முதலில் நாம் முழுமையாகத் தெரிந்து கொண்டு சூழ்நிலைகளும் நம் இரசனைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவதே சிறந்த கலைக்கான தொழில்நுட்பம்.
சினிமாவில் ஃபிலிம் 'ரா ஸ்டாக்' (Raw stock) என்று அழைக்கப்படுகிறது. ஃபிலிம் படச்சுருளானது ஒளி புகாத படப்பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் 400 அடி அளவு உள்ள வகையில் வைக்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு புகைப்படச்சுருளுக்கு 36 புகைப்படங்கள் எடுக்க முடியுமோ அப்படி ஒரு பெட்டி 400 அடி அளவிலானது. இருண்ட அறையிலோ அல்லது இருண்ட பகுதி கொண்ட பை பெட்டியை பிரித்து படச்சுருளை காமிராவில் உள்ள மெகசின் ‘magazine’ உள்ளே பொருத்தப்பட்டு பிறகு மெகசின் காமிராவில் பொருத்தப்படும்.
சுமார் ஒரு படத்திற்கு 50,000 அடியிலிருந்து 2 லட்சம் அடிவரை ஃபிலிம் அந்தந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பிற்கேற்ப செலவாகும். ஆனால் ஒரு படத்திற்கு 16ஆயிரம் அடி மட்டுமே கடைசியில் எடிட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
ஒரு காட்சியைக் காமிராவில் பதிவு செய்யும்போது அக்காட்சி தலைகீழாகத்தான் பதிவாகும். காமிராவில் பதிவான ஃபிலிமை மீண்டும் ஒளி புகாதவாறு பெட்டியில் வைத்து லேபிற்கு அனுப்பி , அங்கு எக்ஸ்போர்டு ஃபிலிம் கழுவி டெவலப் செய்து பாசிடிவ் ஃபிலிம் பதிவு செய்யப்படும்வரை குளிர்செய்யப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள்.

சினிமா- தோற்றமும் அதன் தொழில் நுட்பமும்


சினிமா- தோற்றமும் அதன் தொழில் நுட்பமும்
சி. ஜெ. ராஜ்குமார் 

சினிமா தோன்றலுக்கு ஆரம்ப விதையான 'புகைப்படக் கலை' மற்ற எல்லாக் கலைகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது. காரணம் அது எப்படி உருவானது என்கிற விஞ்ஞானப் பூர்வமான பதிவுகள் நம்மிடையே இருப்பதே.
புகைப்படக்கலைக்கு அடிப்படை தத்துவமான ‘காட்சிப்பதிவு’ அது ஒளியின் மூலமாக எப்படி உருவானது என்பதை 6-ஆம் நூற்றாண்டிலேயே ‘அரிஸ்டாட்லி’ என்ற அறிஞர் மூலமாக உலகிற்கு தெரிய வந்தது. அவர் ஓர் இருண்ட அறையில் முன்னே ஓர் ‘துவாரத்தின்’ வாயிலாக வெளியே இருந்த (Subject) காட்சிகள் இருண்ட அறையில் தலைகீழாக, மங்கலாக உருவெடுத்ததை கண்டார். இதுவே வருங்காலங்களில் உலகின் மிகச்சிறந்த கலைவடிவத்தின் விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டது.
பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ‘மங்கலாக’ தெரிந்த அல்லது உருவான ‘காட்சிகளை தெளிவாக்க முயற்சியில் ஈடுபட பின்னர், அச்சிறு துவாரத்தின் ‘லென்ஸ்’ (Lens) பொருத்தப்பட்டபோது இருண்ட அறையில் தெளிவான காட்சி பிம்பம் (Image) உருவானது. அதன் அடிப்படையில உருவானதுதான். ‘காமிரா அப்ஸ்குரா’ (Camera Obscura) -Lens என்பது Convex கண்ணாடியும் Concave கண்ணாடியும் இணைத்து வடிவமைக்கும் போது உருவானது. லென்ஸ் பொருத்தி 1670 ல் ‘ராபர்ட் பாய்லி’ ‘காமிரா அப்ஸ்குரா’ உலகின் முதற் புகைப்படக் காமிராவானது.
இதற்கு முன்னர் Lens இல்லாமல் ‘இருண்ட அறை’ யை ஒரு பெரிய பெட்டி (Box) போன்ற வடிவத்தில் அதன் நடுவில் ஒரு சிறிய துவாரத்தை ஏற்படுத்தி உள்ளே ‘கண்ணாடிக் காகிதம்’ (Tracing Sheet) வைத்து காட்சிப்பிம்பத்தை உருவாக்கினார் ரோம் நகரில் ‘கிர்சர்’ என்ற விஞ்ஞானி. இது நடந்தது. 1646.
‘OBSCURA’ என்றால் லதீன் மொழியில் ‘இருண்டஅறை ‘என்றே பொருள். இருண்ட அறையில் உருவான காட்சிப்பிம்பத்தை’ எப்படி, எதன் மூலமாக பதிவு செய்வது என்று பல நாட்டைச் சார்ந்த பல விஞ்ஞானிகள் நீண்ட வருடங்களுக்கு பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்தன.
ஏறத்தாழ 200 வருடங்களுக்கு பிறகு நவீன புகைப்படக்கலையின் சரித்திரம் தோன்றியது. 1839 ஆம் ஆண்டு ‘டாக்ரே’ மற்றும் ‘வில்லியம் ஹென்றி’ ‘பாக்ஸ் தால் போட்’ இவ்விரு விஞ்ஞானிகள் இன்று நடைமுறையிலிருக்கும் புகைப்படக்கலையின் செயல் முறை தத்துவத்தையும் அறிவித்தனர்.
அவர்கள் காமிராவில் காட்சியை பதிவு செய்து அது ‘புகைப்படமாக’ உருவாக்கத்திற்கு மூன்று முக்கிய முயற்சிகளை உருவாக்கினர்.
1, ‘Silver Halide’ ரசாயனத்தை காகிதத்திலோ, பிலீமிலோ (Film) தடவி (இருண்ட அறையில்) அதை காமிராவில் வைத்து ‘ஒளியால்’ Expose செய்து ஒளி லென்ஸின் வழியாக பிலிம் மீது காமிராவில் படும் போது மாற்றம் ஏற்பட்டு ஒரு காட்சிப்பதிவு (Image) உருவாகி இருப்பதை ‘Latent Image 'என்று கூறுகிறோம்.
2, பிலிமில் பதிவான காட்சி பிம்பத்தை இருண்ட அறையில் Image Developer ரசாயணத்தால் (Photo Chemicals) Develop செய்வது.
3, Developing என்ற முறையை நிறுத்தி அதன் மூலமாக உருவான Image ‘Fixing’ என்ற முறையால் மேலும் தேவைக்கேற்ப உருவான காட்சியை (image) அதற்கு மேலும் ரசாயண மாற்றம் ஏற்படாமல் Image Fixing செய்வது.
இந்த தொழில் நுட்பம் மிகப்பெரிய விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டது. புகைப்படக்கலை இதிலிருந்து பெரிய மாற்றத்தை கண்டு வேகமாக, மக்கள் கலையாக உருவெடுத்தது.
அதற்கு முக்கியமானவர் Kodak நிறுவனர் George Eastman ஆவார். ஆரம்பத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் பல மணி நேரம் ஏதொ பொருளோ அல்லது மனிதர்களோ அசையாமல் இருக்க வேண்டும். அதற்கு காரணம் புகைப்படம் எடுக்க தேவையான ரசாயன பொருட்கள் (Silver Halides) மிகவும் குறைந்த செயல் திறன் கொண்டது. மேலும் ‘காமிரா’ மிகவும் பெரிதாகவும் ஒரு குதிரை வண்டியில் ஏற்றி செல்லும் அளவிற்கும் இருந்தது.
George Eastman: ஒளி மாற்றம் ஏற்படும் ரசாயன (Silver Halide) திறனை அதிகரித்து ‘Film’ என்னும் மீடியத்தில் அதைக் கொண்டு உருவாக்கி காமிராவின் அளவை கைக்கு அடக்கமாக கொண்டு வந்து நீங்கள் காமிராவின் பொத்தானை கிளிக் செய்யுங்கள் மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று வாசகத்தை விளம்பரமாக மக்களிடம் புகைப்படக்கலையை கொண்டு சென்றார்.
அதற்கு முன்னர் புகைப்படம் எடுப்பவர்களே போட்டோவை இருண்ட அறையில் கழுவி-Developer மூலமாக Image உருவாக்கி அவர்களே Print செய்து கொள்ள வேண்டும்.
Photo Lab ஐ George Eastman உலகம் முழுவதும் பல இடங்களில் அமைத்தார்.
புகைப்படக்கலையின் ஆரம்பத்தோற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் ‘சினிமா’ என்னும் மாபெரும் கலையின் உருவாக்கத்தைப் பார்ப்போம்.
உலகின் மாபெரும் சக்திவாய்ந்த கலையான ‘சினிமா’ 19 ஆம் நூற்றாண்டில் பல ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு ‘லூமியா’ சகோதரர்கள் ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த இவர்களால் முக்கிய கட்டத்தை அடைந்து, ‘சினிமா” தொழில் நுட்பம் வடிவம் அடைந்து பிறந்தது. சினிமா என்பது கினிமா (Kinema) என்கிற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்தது. இதன் அர்த்தம் ‘அசைவு’ சினிமா ‘Persistence of Vision’ அடிப்படையில் இயங்குகிறது. Motion Picture என்றால் காமிராவில் பதிவு மற்றும் Projector மூலமாக தொடர் Still Images மூலமாகவே அசைவுகளை Motion Pic காமிராவில் பதிவு செய்து, Projector மூலமாக திரையில் பார்க்கிறோம்.
இதன் அடிப்படை என்ன என்றால், நம் கண்களில் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளை 1/8 அதிகமான நொடி நேரத்துக்கு தக்க வைத்துக் கொள்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சி விழித்திரையில் ஏற்கனவே பதிவான நொடிக்கு (1/16) அது மறைவதற்கு முன் அடுத்த காட்சி நம் விழித்திரையில் பதிவானால் அவை ‘தொடர் காட்சிகளாக’(Serious of Still Images)) பதிவாகி ஒவ்வொன்றிலும் இன்னொரு பதிவிற்கும் சிறிதாக உள்ள வேறுபாடு அடிப்படையில் ‘அசைவுகளாக’ மாறுகிறது.
இதன் அடிப்படையிலேயே சினிமா காமிராக்கள் உருவானது. ‘சினிமா’ பிறக்க பலர் தங்களுடைய ஆராய்ச்சியை தொடர்ந்தாலும்’தாமஸ் ஆல்வா எடிசன் கண்டு பிடித்த ‘கைடைஸ் கோப்’ (Kinetascope) தான் அசையும் உருவங்களாக துண்டு படங்களை ‘லென்ஸ்’ வழியாக பார்க்க உதவியது.
இப்போது, தொடர் Still காட்சிகளாக பதிவு செய்த பிலிம்களை, படங்களாக ஆக்கும் ‘கருவி’ (Projector) அறிமுகமாகி மக்களிடம் மிகப் பெரிய ஆச்சர்யத்தை உருவாக்கியது. மெல்ல சினிமா ஒரு நிமிடமாக 5 நிமிடமாக பல நாடுகளுக்கு சென்றது.
சினிமா ஆரம்பதத்தில் ஊமைபட்படங்களாகவே அறிமுகமானது. மக்களிடம் சினிமா மோகம் ஆரம்பிக்கும் முன்னர் பலர் அதை ‘விசித்திர பொருளாகவே’ பார்தனர். மெல்ல மெல்ல ‘சினிமா’ தன் தொழில் நுட்பத்தாலும் வளர்ந்தது. அமெரிக்காவில் ‘இரயில் அதன் ஸ்டேசனை” நோக்கி வருவதை திரையரங்கில் திரையிட்டபோது அப்பொது அந்த ரயில் தங்கள் மீது மோத வருகிறது என்று எண்ணி திரையரங்கை விட்டு ஓடிய நிகழ்ச்சி இன்றும் சினிமாவின் தோற்றத்தைப் பற்றி பேசுபவர்களிடம் மிகவும் பிரபலம்.
சினிமா காமிராவானது ஆரம்பத்தில் ஒரு நொடிக்கு ‘16’ ஃபிரேம் (Frame) களை பதிவு செய்யும் தொழிற்நுட்பத்துடனே இருந்தது. ஆதலால் கதாபாத்திரங்கள் கொஞ்சம் இயல்பை மீறி செய்ல்படுவது போலவே இருக்கும்.
பொழுதுப் போக்குத் திரைப்படத்தின் ஆரம்பமே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘எட்வின்.S.போர்டர்’; இயக்கிய ‘தி கிரேட் டிரெயின் ராபரி’. இப்படம் சாகசத்திரைப்படங்களுக்கான அனைத்து அம்சங்களும், பெரிய வெளிப்புற காட்சிகளும் தொடர்ந்து கதை நிகழ்வுகள் கொண்ட திரைப்படமானது. ரயிலில் திருடர்கள் கொள்ளை அடிக்க அத்திருடர்களை போலீஸ் எப்படி பிடிக்கிறார்கள் என்பதே இதனுடைய கதை அம்சம்.
இப்படத்தின் சிறப்பு காமிரா ஒரு காட்சியை பல கோணங்களிலிருந்து படமாக்கும் முறையையும் அதை சரியான தொடரில் படத்தொகுப்பும் -அறிமுகமானது.
‘The great train robbery’ மக்களிடம் மிகப்பெரிய ஆச்சர்யத்தையும், அசையும் காட்சிகள், வேகமாக நகரும் ரெயில்கள், துப்பாக்கிச்சண்டை, என்று உலகில் இருவரை காணாத புதுமையான அனுபவங்களையும் மக்களுக்கு இத்திரைப்படம் கொடுத்தது. சாகசக்காட்சிகள் நிறம்பியிருந்தாலும் அப்படத்தில் சின்ன கதையம்சமும் கலந்தே இருந்தது. ‘கொள்ளையர்கள் ரெயிலில் கொள்ளை அடிப்பதை பார்ப்பது ஒர் ‘சிறுமி’. அச்சிறுமியின் புகாரின் அடிப்படையிலே போலீஸின் துரத்தல் ஆரம்பிப்பது போன்ற சம்பவமும் அன்று ‘சினிமா’ புதிய தளத்திற்கு செல்ல வித்திட்டது.
ஒரு சமூகத்தின் புரட்சியும் யதார்த்த சினிமாவிற்கு ஆரம்ப விதை ‘தி பெர்த் ஆஃப் நேஷன்’ (The Birth of Nation) திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் சினிமாவின் தந்தையாக கருதப்படும் மாமேதையான ‘D.W. கிரிஃபித்’.
இன்று நடைமுறையில் இருக்கும் சினிமாவிற்கு ‘காட்சி மொழி’ யை உருவாக்கியதாலும் சினிமா நுட்பத்தில் இன்றும் கதைச்சொல்லியான ‘க்ளோசப்’ ( Close-up ) படத்தொகுப்பு முறை, காட்சிகளில் உள்ள வேருபாடுகளான மிட் ஷாட்(Mid Shot), லாங் ஷாட்(Long shot), அதீத லாங் ஷாட்(Ext. Long Shot) போன்ற பல கேமிரா கோணங்களால் ‘ஒரே காட்சியை’ எடுத்து அதை சீராக தொகுத்து சினிமாவிற்கான அடிப்படை ‘காட்சி மொழி ’ (Film Language) உருவாக்கியதாலும் நவீன சினிமாவிற்கான ஆரம்பமாகவே இப்படம் கருதப்பட்டது.
‘D.W. கிரிஃபித்’, தொடர்ந்து பல சிறந்த படங்களை இயக்கினார் அவற்றில் ‘இன் டாலரன்ஸ்’ உலகின் மிகச்சிறந்த சினிமாக்களில் ஒன்று தொடர்ந்து ரசியா ( Russia ) தன் பங்கிற்கு சினிமா வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது. புடாவ்கின் (Pudavkin) இன்ஸ்சன்டைன்’ ஆகிய கலைஞர்கள் அன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து திரைப்படங்களை உருவாக்கினார், இவர்கள் படத்தொகுப்பில் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டார்கள் குறிப்பாக ‘ மதர்’ (Mother) திரைப்படத்தில் ஒருவன் நீண்ட நாட்களாக சிறையிலிருக்கும் அனுபவத்தையும் அவனுக்கு நாளை சிறையிலிருந்து ‘ விடுதலை’ என்ற செய்தி கூறப்படும் போது அவனுடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? அவனுடைய முகபாவங்கள் மூலமாக அவனுடைய உணர்வுகள் சொல்லாமல், (Montage ) மான்டேஜ் காட்சி உத்திகளை பயன் படுத்தினார் இயக்குனர். அசையும் மரங்கள் அப்படியே Freeze ஆகி மீண்டும் அசைவது. கடல் அலை பாறை மீது பட்டு Freeze ஆகி மீண்டும் அலையடிப்பது இப்படி திரைப்பட பார்வையாளர்களுக்கு சினிமாவில் Montage) மான்டேஜ் என்றால் படத்தொகுப்பின் மூலமாக புதிய சிந்தனைகளையும் காட்சி மொழியையும் உருவாக்கினார்.
சினிமாவில் ‘ஒலி இல்லாத காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றனர்.அதில் உருவான மாபெரும் கலைஞன் ‘சார்லி சாப்ளின்’ அவருடைய படங்களில் நகைச்சுவை காட்சிகளோடு மனதை தொடும் ‘ மெலோ டிராமா” அடங்கிய சிறந்த கதைகளும், காட்சிகளும் இருந்தன.அவரே உலகம் முழுவதும் பிரபலமாகி நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் மாபெரும் கலைஞர் ஆவார்.
சினிமா மௌனப்படங்களாக தொடர்ந்தாலும் அன்றைய சூழலில் நாடகமே பிரதான பொழுது போக்கான சினிமாவிற்கு சவாலாக இருந்தது.
1927- ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் தயாரித்த ‘ஜாஸ் சிங்கர்’ (Jaaz singer)– முதல் பேசும்படமாக வந்தது- 1929 ல் ‘ஆன் வித்தி ஷோ’ முதல் வண்ணப்படமாக வெளிவர சினிமா அசுர வளர்ச்சியடைந்தது ‘ஒலி’ அமைப்புடன் வசன உச்சரிப்பை பதிவு செய்ய சினிமா காமிராவில் நொடிக்கு 24 Frame என்ற அடிப்படைக்கு மாற்றம் கண்டது.
சினிமாவின் அடிப்படை தொழிற் நுட்பமும் அதைப் பற்றிய செயல்பாடுகளும் இனி வரும் வாரங்களில் படிப்போம்
1. ஃபிலிம்- அடிப்படைத்துவம்
2. புகைப்படக்காமிரா- செயல்பாடுகள்
3. சினிமா காமிராவும் அதன் லென்ஸ் பற்றிய விரிவான கட்டுரை
4. காமிரா கோணங்கள்
5. காட்சிகளின் வகைகள் (Different types of Shots
6. 35 MM / Cinemascope / 70 MM / 16 MM பற்றிய குறிப்புகள்
7. லைட்டிங் / கருவிகள் / கலர் டேம்பர்ரேச்சர் ( Colour Temprature)
8. படப்பிடிப்பிற்கு முன் தயாரிப்பு பணி ( Pre Production)
9. படப்பிடிப்பு ( Shooting)
10. இருதி கட்டப் பணி ( Post Production)
சில முக்கியமான வரலாற்றுப் பதிவுகள் 1900 - 1910 வரை
1. Sharkey மற்றும் Jeffries என்ற குத்துச் சண்டை வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியை நான்கு மூவி கேமரா, நானூறு (400) விளக்குகளைக் கொண்டு படமாக்கிய நிகழ்ச்சியை "British Journal" என்ற பத்திரிகை ஒளிபரப்பியது. இதுவே அதிக நீளமான படக்காட்சியாக லண்டனில் அறிவிக்கப்பட்டது.
2. Eugunelauste தனது ஆப்டிகல் சௌன்ட் ரெகார்டிங் (Optical Sound Recording) அமைப்புக்காக காப்புரிமை பெற்றார்.
3. கட்டிட வல்லுநர் மாலோ (Malo) வடிவமைத்த நிரந்தர சினிமா அரங்கம் பாரிசில் வின்டெர் சர்க்கஸ் (Winter Circus) எனுமிடத்தில் உருவாக்கப்பட்டது.
4. Louis Lumiere வண்ணப்படங்களை ப்ராசெஸ் (Process) செய்யும் முறைகேற்ப மூன்று வண்ண ஸ்க்ரீன் சிஸ்டத்தை உருவாக்கினர்.
5. 1907 ல் திரைப்படங்களை திரையிடும்போது காட்சிகளுக்கிடையில் டைட்டில் கார்ட் போடும் முறை ஏற்படுத்தப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
6. திரையரங்குகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இத்தாலியில் 500 திரையரங்குகளும், இந்தியாவில் ஒரு திரையரங்கும் உருவானது.
7. தணிக்கை முறை முதன்முதலாக சிகாகோ நகரில் போலீசாரால் கொண்டுவரப்பட்டது.
8. இங்கிலாந்தில் "Kinemathographer Film Maker Association" உருவானது.
9. 1906 ல் உலகின் முதல் முழு நீளத் திரைப்படமான "Story of the Gilli Gang" எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடியது.
10. 1910 வரை சினிமாவில் இயக்குனர்களின் பங்கு முக்கியமாக இருந்தது. 1920 களில் அமெரிக்காவின் சினிமா படப்பிடிப்பு முறையும், அத்துறையின் வளர்ச்சியும் உலகம் முழுதும் பரவத் தொடங்கியது. ஒரு வருடத்தில் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்தன.

தமிழ் சினிமா பட்டியல் (1937-1940)


தமிழ் சினிமா பட்டியல் (1937-1940) ( Tamil cinema list (1937-1940) )


    1937:
  1. அம்பிகாபதி
  2. அருணகிரிநாதர்
  3. ஆண்டாள் திருக்கல்யாணம்
  4. கவிரத்னா காளிதாஸ்
  5. கிருஷ்ண துலாபாரம்
  6. குட்டி
  7. கௌசல்யா பரிணயம் (அல்லது) மிஸ்டர் அம்மாஞ்சி
  8. சதி அகல்யா
  9. சதி அனுஷ்யா
  10. சாமுண்டீஸ்வரி
  11. சிந்தாமணி
  12. சுந்தரமூர்த்தி நாயனார்
  13. சேதுபந்தனம் (அல்லது) ஆசை
  14. டேஞ்சர் சிக்னல்
  15. தியாகராஜா (ஸ்ரீ)
  16. தேவதாஸ்
  17. நவயுனன்
  18. நவீன நிருபமா
  19. பத்ம ஜோதி
  20. பக்கா ரவுடி
  21. பக்த அருணகிரி
  22. பக்த புரந்தரதாஸ்
  23. பக்த ஜெயதேவர்
  24. பக்த துளசிதாஸ்
  25. பஸ்மாசூரா மோகினி (அல்லது) மிஸ்டர் டைட்-லூஸ்
  26. பாலாமணி (அல்லது) பக்காதிருடன்
  27. பாலமோகினி
  28. மின்னல்கொடி
  29. மிஸ் சுந்தரி
  30. மைனர் ராஜாமணி
  31. ராஜபக்தி
  32. ராஜ மோகன்
  33. ராஜசேகரன் (அல்லது) ஏமாந்த சோணகிரி
  34. வள்ளல் மகாராஜா
  35. விக்ரம் ஸ்திரிசாகசம் (அல்லது) நவீன ஸ்திரிசாகசம்
  36. விப்ர நாராயணா
  37. விராட பர்வம்
  38. ஹரிஜனப் பெண்
    1939:
  1. அதிர்ஷ்டம்
  2. ஆனந்தா ஆஸ்ரமம்
  3. கிரதா அர்ஜுனா
  4. சக்தி மாயா
  5. ஸ்ரீ சங்கராச்சாரியா
  6. சந்தன தேவன்
  7. சாந்த சக்குபாய்
  8. சிரிக்காதே
  9. அடங்கா பிடாரி
  10. புலி வேட்டை
  11. போலி பாஞ்சாலி
  12. மாலைக் கண்ணன்
  13. யமவாதனை
  14. சீதா பஹரணம்
  15. சுகுண சரசா
  16. சைரந்தரி
  17. சௌபாக்கியவதி
  18. தியாக பூமி
  19. திருநீலகண்டர்
  20. பம்பாய் மெயில்
  21. பக்த குமணன்
  22. பாரத் கேசரி
  23. பாண்டுரங்கன் மகிமை
  24. பிரகலாதன்
  25. மதுரை வீரன்
  26. மன்மத விஜயம்
  27. மாணிக்கவாசகர்
  28. மாத்ருபூமி
  29. மாய மச்சேந்திரா
  30. மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
  31. ரம்பயின் காதல்
  32. ராமலிங்க சுவாமிகள்
  33. ராம நாம மகிமை
  34. வீர கர்ஜனை
  35. வீர ரமணி
    1938:
  1. அனாதைப் பெண்
  2. அதிர்ஷ்ட நட்சத்திரம்
  3. என் காதலி (அல்லது) மாப்பிள்ளை
  4. ஏசுநாதர்
  5. கம்பர்
  6. கந்தலீலா (ஸ்ரீ)
  7. கண்ணப்ப நாயனார்
  8. குற்றவாளி
  9. சொர்ணலதா
  10. சேவாசதனம்
  11. தட்சயக்ஞம்
  12. தாயுமானவர்
  13. தசாவதாரம்
  14. துளசி பிருந்தா
  15. துக்காராம்
  16. தென்னாலிராமன்
  17. தேச முன்னேற்றம்
  18. நந்தகுமார்
  19. பக்த மீரா - ஜோக் சுந்தரம் இராம விஜயன்
  20. பக்த நாமதேவர்
  21. பஞ்சாப் கேசரி
  22. பாக்கிய லீலா
  23. பூ கைலாஸ்
  24. போர் வீரன் மனைவி (அல்லது) அசட்டு வீரன் மனைவி
  25. மட சாம்பிராணி
  26. மயூரத்வஜா
  27. மாயா மாயவன்
  28. யயாதி
  29. ராஜ துரோகி
  30. ஸ்ரீ ராமானுஜர்
  31. வனராஜா கார்சன்
  32. வாலிபர் சங்கம்
  33. விப்ர நாராயணா
  34. விஷ்ணு லீலா
  35. வீர ஜெகதீஷ்
  36. ஜலஜா
  37. ஹரிஜன சிங்கம்
    1940:
  1. உத்தமபுத்திரன்
  2. ஊர்வசி சாகசம்
  3. அபலா
  4. காளமேகம்
  5. கிருஷ்ணன் தூது (அல்லது) நவீன தெனாலிராமன்
  6. சந்திரகுப்த சாணக்கியர் (அல்லது) தறுதலை தங்கவேலு
  7. சகுந்தலை
  8. சதி மகானந்தா
  9. சதி முரளி
  10. சத்தியவாணி
  11. டுஃபான் க்யூன்
  12. தமிழ்த் தாய்
  13. திலோத்தமா
  14. தானசூரகர்ணா
  15. திருமங்கை ஆழ்வார்
  16. தேசபக்தி
  17. நவீன விக்ரமாதித்தன் (அல்லது) புத்திமான் பலவான் ஆவான்
  18. நீலமலைக் கைதி
  19. பக்த சீதா
  20. பக்த கோரகும்பா
  21. பக்த துளசிதாஸ்
  22. பக்த சேதா
  23. பரசுராமர்
  24. பாக்கிய தாரா
  25. பாலிய விவாகம்
  26. பூலோக ரம்பை
  27. மணிமேகலை
  28. மீனாட்சி கல்யாணம்
  29. மும்மணிகள்
  30. இரண்டனா
  31. பாலபக்தன்
  32. டாக்டர் பங்காரு
  33. ராஜயோகம்
  34. வாயாடி
  35. போலி பாஞ்சாலி
  36. யெஸ், யெஸ்
  37. வாமன அவதாரம்
  38. விக்ரம ஊர்வசி
  39. விமோசனம் (அல்லது) ஐ.சி.எஸ். மாப்பிள்ளை
  40. ஷைலக்
  41. ஹரிஹர மாயா
  42. ஜெய பாரத்
  43. ஜெய கொடி