வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழுக்காக என்று அரசியல் செய்யும் திருடர்களில்...




நட்பின் உள்ளங்களுக்கு இனிய வணக்கம்….!

திராவிட மொழிகளில் முதன்மையானதாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் 
துளு போன்ற மொழிகள் கருதப்படுகின்றன.
இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.  திராவிட என்ற சொல் தமிழ என்ற சொல்லில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்பதை இனவியல் கட்டுரை (இயல்06) சுட்டிக்காட்டியுள்ளது.
திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். 
மு. வரதராசனார் கூறுவதை இனிபார்ப்போம். இந்திய நாடு முழுவதும் பழங்காலத்தில் ஒரே மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி ((Proto Dravidian) என்று கூறுவர். பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் தோன்றின. அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழி பலவகை மாறுதல்கள் பெற்றது.
அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்த காரணத்தால் அவை திராவிட மொழிகளாகவே ஆங்காங்கே நின்று விட்டன. கோமி, பார்ஜி, நாய்கி, மால்டா, ஓரொவன், கட்பா, குருக், பிராகூய் முதலான மொழிகள் இன்றும் திராவிட மொழி இனத்தைச் சார்ந்த வைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவே 
இப்படி என்னதான் திராவிடம் பற்றி இருந்தாலும் தமிழின் பெயரால் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு அடுத்ததாக தமிழுக்காக என்று அரசியல் செய்யும் பா.ம.க கட்சியின் நிறுவனர் செய்தியாளரிடம்
திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம் என பா.. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருடர்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்து, மரங்களை வெட்டினாலும் பசுமைத்தமிழகமாக மாற்றுவோம் என்று வெட்கமில்லாமல் கூறிவரும் இவர்களுக்கு கெட்ட வார்த்தையுடன் சகவாசம் ஏன்?
தி.மு.க வில் இருந்து அதே குடும்ப அரசியலினை கையாளும் இவரும் அவர்களுடன் சேர்ந்தவர் தானே… என்ன அங்க குடும்பம் பெருசு இங்க சிறுசு… ! வெக்கம் கெட்ட அரசியல்வாதியாகத்தானே எல்லோரும் இருக்கீங்க. மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சேனு பீபீபீ…த்திக்கிறாங்க வெளக்கெண்ணைங்க. ஆட்டோ க்கு தானி நு கண்டுபிடிச்ச உங்க தமிழ் நுட்பம் தெரியாதா எங்களுக்கு? (ஆட்டோமேட்டிக் அப்படினா தானியங்கி – ஆட்டோ வ தானினு சொல்றாங்க தமிழோசையில்) இப்ப திராவிடம் என்பதை கெட்ட வார்த்தைங்கிறீங்க, அட எதுவா இருந்தாலும் நீங்க கருதுங்க... காரி துப்புங்க , மக்களிடம் தப்பா கொண்டுபோகாதீங்க நண்பரே…!

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

             அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும் இணைபிரியா உறவு உண்டு.    அதனால் தான் முதல் அமைச்சராக அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் வந்தார்கள், வென்றார்கள் , மக்கள் பணத்தை தின்றார்கள்… தின்றுகொண்டே இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் நம் ரசிக சிகாமணிக்கள் திரைப்படத்தைப்பார்த்து ரசிப்பதைவிட , அந்த நடிக்கருக்காக தீக்குளிப்பதையும் , நடிகைக்காக கோவில் கட்டுவதையும் அதிக கவனத்துடன் செலுத்தினார்கள். தனக்கு ஒரு தலைவன் வேண்டும் என்றும் தன் கோபத்தை ஒருவர் திரையில் தணிக்கிறார், தவறு செய்தவனை ஓங்கி அரைய வேண்டும் என்று நினைத்த போது தன் தலைவன் அவனைத்தூக்கி பந்தாடுகின்றானென்றும் நினைத்து பெருமிதப்படுகிறான்.
        இதனைப்போன்ற நிகழ்வுகளே ரசிகனை பித்தனாக்கி ரசிகர் மன்றம் வைத்து, போஸ்டர் அடித்து , முதல்காட்சிக்காக பணம் செலவழித்து, திரையில் தோன்றியதும் மலர் தூவி ஆரவாரம் செய்துகொண்டும் இருக்க காரணமாகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் பெறவேண்டும் என்ற ரசிகர்களின் வெளிப்பாடாக இருந்த யாகம், அன்னதானம் , வேண்டுதல் போன்றவையும் பார்த்துகொண்டு இருக்கிறோம். சிலர் ரசிகர்மன்றம் என்பதனை மாற்றி நற்பணிமன்றம் என்ற பெயரில் பெயரளவில் மாற்றம் கொண்டு செயலளவில் துற்நாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

தனது பிள்ளைகளுக்கு புத்தகம் வழங்கவில்லை, ஆனால் தேர்வு நடக்கிறதே எப்படி என்று சிந்திக்க நேரம் இருக்குமா ரசிகர்களுக்கு?

முதல்நாள் பேனர் வைத்தும், அதிக விலைகொடுத்தும் படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களது சொந்த சகோதர சகோதரிகளுக்கு
குறைந்த விலையிலாவது ஏதாவது செய்திருப்பார்களா?

பாலாபிஷேகம், திரையில் வந்ததும் மலர்தூவுவது , படப்பெட்டியை மேளதாளத்துடன் கொண்டுவரும் ரசிகர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் முதியோர்களையும் ஆதரவற்ற பிள்ளைகளையும் நினைத்துப்பார்த்திருப்பார்களா?

இளைஞர்களின் சக்தியானது அணு போன்றது, இந்த சக்தியைக் கொண்டு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் நம் சமுதாயத்தை.

சமீபத்தில் அஜீத் தனது ரசிகர்மன்றத்தை கலைத்தார். காரணம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் தற்போது ஒரு காரணம் சொன்னார்….

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

இவரின் இந்த பதிலை மற்ற தலைவர்கள் விஜய், ரஜினி, கமல், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை ஏற்காமல் ரசிகர்களைக் கொல்வார்களா?
- சித்ரவேல் 

சனி, 6 ஆகஸ்ட், 2011

பாமாக வின் அதிரடியான காமெடி அறிவிப்பு


பாமாக வின் அதிரடியான காமெடி அறிவிப்பு ஒன்றை நண்பர் ராமதாசு வெளியிட்டார். அது இன்னானா…..
"தமிழகம் முழுவதும் பா... சார்பில் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
அட படிச்சதும் சிரிச்சா என்ன அர்த்தம்? ஏன் அய்யா டாஸ்மாக் வேணாம் அடிக்கணும்ணு அவ்ளோ கோவமா சொல்றாங்கணு யோசிக்க வேண்டாமா? திருட்டுக் கழகங்களுடன் கூட்டணி இல்லை நாங்க தனியா திருட கத்துக்கிட்டோம் மக்கள் வாய்ப்புக்காக நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் என்று ராமதாஸ் சொல்றப்ப அவங்க மாறி மாறி குடிமக்களை உருவாக்கி வர்றத எதிர்க்கிறதா எப்பவும் போல விடற டுபாகூர் தான் இதுவும். ஒரு கற்பனையாக இவங்க திருவண்ணாமலை பக்கம் போய் டாஸ்மாக் எல்லாம் அடிச்சி நொறுக்கினா… நொறுக்கிய பாட்டாளிகளுக்கு மாலையில் சர்க்கு பார்ட்டி மாவட்ட செயலாளர் வைக்காம இருப்பாரா?
இவரது கட்சியில் குடிப்பவர்கள் அனைவரையும் நீக்க சொன்னோம்னா… அய்யா கதி ? யாரும் இல்லணு தெரியும், அவருக்கும்... படிக்கிற உங்களுக்கும்.... நம்ம பாட்டாளி மக்களுக்கும்.
2011 ல் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் விரைவில் ஆட்சி அமைப்போம் என்றெல்லாம் பீட்டரோ பீட்டர் விட்ட நண்பர் ராமதாசு 2016ல் பாமகா ஆட்சி அமைக்கும் என்று தனது பீட்டரை தொடர்ந்துள்ளார்.
சில மக்களை ஏமாற்றும் செய்திகள்
திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டேன் என்பதை நிரூபிக்க தீக்குளிக்கவும் தயார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி பாமக சார்பில்  தமிழகத்தின் வட பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் போராட்டம் நடத்தி கைதானார். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.
அய்யா… இலவசமா தினமும் ஒரு கிராமத்துல வைத்தியம் பாருங்க மருத்துவர் ராமதாசா மக்கள் கிட்ட போகலாம்… பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாசா பீட்டர் விடாமலும், தன் மகனுக்காக உழைக்கும் அரசியல்வாதியா இல்லாமலும் இருங்க… ஆட்சிய மக்களே கலைச்சி உங்கள முதல்வரா ஆக்குவாங்க… ..
ஆனால் முடியுமா நம்ம நண்பர் ராமதாசு அவர்களால….. 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சிம்பு தொலைக்காட்சி விரைவில்…


செய்தி : சிம்பு தொலைக்காட்சி விரைவில்…  
விசித்திர லொல்ளு பார்வை: chithiran-vel.blogspot.com
விரைவில் வம்பு தொலைக்காட்சி சாரி சாரி… சிம்பு தொல்லைக்காட்சி… அய்யோ மறுபடியும் சாரிங்க….., சிம்பு தொலைக்காட்சி விரைவில்… அதுவும் இந்த வருட இறுதிக்குள்ளாம். அட என்ன கொடுமைடானு நினைச்சி , குளிக்கறப்ப அழுதுகொண்டிருந்த சில பேரிடம் கருத்து கணிப்பு நடத்துனப்ப…
நடத்துனப்ப…
 அட கீழ நீங்களே படிங்க, என்னால முடியல….

கருத்து கண்ணப்பன்: நம்ம டி ஆர் நல்லவருங்கோ, அரசியல்வாதி எல்லோரும் டிவி வச்சி கட்சி பெருமைய போடுறப்ப இவரும் ஆரம்பிக்கறது மக்கள்ட வெறுப்பாதாங்க சே..சே.. வரவேற்பாதான் இருக்கும்னு தோணுதுங்கோ.
திருட்டு முன்னேற்ற கழகத்தின் தலைவர் : கழகத்தின் மூலம் தொழில் கற்று , சினிமா சறுக்கியபோது அரசியலில் எழ நினைத்த என் ஆறாத உயிர் ராஜேந்திரின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். என்னை ஆழ்துயரக்கடலில் தள்ளி என் கட்டுமரத்தை பிடுங்கி  வேறொரு திருட்டு கழகத்திற்கு கொடுத்த மக்களுக்கு தாய்கழகத்தின் மூலம் கொடுக்கும் தண்டனையாக இருக்கலாம்.
கேப்டன் விசிறிகாந்த் (பரிசல் துறை): தமிழ்நாட்டுல மொத்தம் (ஒன்னு ரெண்டு இருபத்தி மூனு…. அட எண்ணிட்ருக்கறதுக்குள்ள கேப்டன் சண்டை சேனல் வந்திடும்) சேனல் இருக்கு இதுல கட்சிக்காரங்க அவங்க கட்சியில் ஊழல் இல்லைனு சொல்றதுக்காக (அதுல நான் இல்லைங்க)  வச்சிருக்குற சேனல் அதிகம். ஆனா தனது மகன ஒரு எம்.ஜி.ஆர் ஆக மாத்த நினைச்சி ஒரு சேனல் ஆரம்பிக்கிறது எனக்கு பயமா இருக்கு, ஏன்னா நானே அவர் பேர சொல்லிதான் பொழப்ப நடத்துறேன். அட பரிசல் ஓட்றத சொல்றேன்பா…

சுவாமி நித்திகுட்டி : பரவால்ல.. தேசத்துக்காக செய்ற நல்லவிஷயம் தான் ஆனா இதுல என் ஆன்மீக நிகழ்ச்சிய அதாங்க பூச்சாண்டி வேலைய காட்டுனா நான் பச்சைகொடி காட்டி , ஓ எங்கிட்ட காவி தான் இருக்குல, சரி காவிகொடி காட்டி தொடங்கி வைக்கிறேன் கூடவே சிஷ்யை ரஞ்சிகுட்டியும் வருவாங்க.

zoo அதிகாரி :  மக்கள் 40சதவீதம் பயப்படற மாதிரி நடக்க போகுதுங்கறதுக்காக , அவர உடனடியா அடைச்சிவைக்கலாம் நு யோசிக்கிறேன். அதுக்குள்ள கொரில்லா சேட்டை ஆரம்பிச்சிடுவாரோனு பயமா இருக்கு…!
ரசிகன் : டேய் டண்டணக்கா… டணக்கணக்கா… கொதிக்க வச்ச தண்ணில வர்றது ஆவி… எங்க தலைவர் ஆரம்பிக்க போறார் சிம்பு டிவி…! ஓடிப்போங்கடா எங்கயாவது தாவி..!
ஒரு பதிவர் : அட போப்பா எத்தன தடவதான் யூடியூப் ல பாக்குறது. ஒரு மாற்றத்துக்கு அவரே சேனல் ஆரம்பிச்சா முழுக்க முழுக்க பாத்து சிரிக்கலாம். ஆனா பசங்க இல்லாதப்பதான் பாக்கனுமே. பயந்துடுச்சிங்கண்ணா… பள்ளிக்கூடம் போகமுடியாதுல, ஏதோ இப்பதான் பாடபுத்தகம் இல்லாம உருப்படியா பசங்க படிக்குறாங்க அத கெடுக்க கூடாது நு ஒரு நல்ல எண்ணத்துல தான் சொன்னேங்க.

இப்படி பலபேர் சொன்னாலும் நாமும் சீரியல் பாத்து அழுதது போதும் இனி  சிம்புவின் லீலைகள் சாரிங்க மறுபடியும் மறுபடியும்.. சிம்புவின் வேலைகள் எல்லாமே புரோகிராமா பாக்க காத்திருக்கலாம். டிஆரின் அடுக்கு மொழிவசனத்தோடு காமெடி பண்ணாலும் வடிவேலு சந்தானம் போன்றோர்க்கு அடுத்தபடியா நல்ல பொழுதுபோக்குதானுங்கோ...!
ஒரு சந்தேகம்... இது காமெடிசேனலா... இல்லை சிம்பு சேனலா. ஓ ரெண்டும் ஒண்ணுதானு சொல்றீங்களா... !