வெள்ளி, 1 நவம்பர், 2013

விக்கல் ஏன் வருகிறது?

திடீரென விக்கல் வருகிறது. தண்ணீர் குடித்ததும் காணாமல் போகிறது. அது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா?
இந்த விக்கல், தும்மல், கொட்டாவி, பசி, பட்டினி, தூக்கம்... இதெல்லாம் எப்போ வரும்னு தெரியாது. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாதுஎன்று முத்து படத்தில் ரஜினி வசனம் பேசியது போல, விக்கல் எப்போது வரும் என்று யூகிக்க முடியாது. நம் உடலில் வயிற்றையும், மார்பையும் இணைக்கும் பகுதிக்கு உதரவிதானம் என்று பெயர். இந்தப் பகுதியில்ப்ரெனிக் நெர்வ்ஸ்’ (Phernic nerves) என்ற நரம்புகள் உள்ளன. இதேபோலடயாஃப்ரம்’ (Diaphragm) என்ற தோல் போன்ற ஒரு தசையும் நம் மார்பக பகுதியில் உள்ளது.ப்ரெனிக்ஸ் நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவிதஎரிச்சல்’ (irritation) காரணமாக டயாஃப்ரம் திடீரென்று வேகமாகச் சுருங்கும். அப்போது அதிகப்படியான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. இதனால் டயாஃப்ரம் தசை இழுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக ஏற்படுவதே விக்..விக்.. என்ற ஓசையுடன் நாம் உணரும் விக்கல்.விக்கலை நிறுத்த தண்ணீரையோ ஒரு பிடி உணவையோ விழுங்கும்போது மேற்சொன்ன செயல்பாட்டில் தடங்கல் (Distraction) ஏற்பட்டு ப்ரெனிக்ஸ் நரம்புகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் விக்கல் நின்றுவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக