ஞாயிறு, 28 ஜூலை, 2013

திரைக்கதையின் பிதாமகன்

பாலா இயக்கிய பிதாமகன் உங்களுக்கு தெரியும், விக்ரம் – சூர்யா இணைந்து நடித்த படம்னு. ஆனால் திரைக்கதையின் பிதாமகன் யார் தெரியுமா? தெரிஞ்சா நாங்களாம் ஏண்டா உன் வலைப்பக்கம் வரப்போறோம்னு கேக்குறது கேக்குது...

திரைக்கதையின் பிதாமகன் "சிட் ஃபீல்டு"  என்பவர்தான். 
இவர் போட்ட ரோட்டுலதான் உலக அளவில் பல படங்களின் திரைக்கதை இருக்குதுங்க. கல்லூரியில் படிக்கும் போது  களப்பயிற்சியில், திரைக்கதையின் பிரம்மாவா இந்தியாவில் இருக்கும் இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மூலமாதான் இவரை தெரிஞ்சுக்கிட்டேன். அப்படி என்ன ரோடு போட்டார்னா, ஒரு திரைப்பட்த்தில் "மூன்று அங்க அமைப்பு" (Three Act Structure)  என்ற முறையில் திரைக்கதை பாணியை வகுத்து ரோடு போட்டாருங்க.
முதல் அமைப்பு: கதையின் ஆரம்பம்
இரண்டாம் அமைப்பு: கதையின் திருப்பம்.எகா(அருணாச்சலத்தில் ரஜினி வீட்டைவிட்டு             .                                                        வெளியேறுதல்)
மூன்றாம் அமைப்பு: கதையின் முடிவு 

ஏய் என்னப்பா இவ்ளோதானா , இதுக்கா அவரா பிதாமகன் ரேஞ்சுக்கு சொல்றனு அவசரப்படாதீஙக,
இந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு "சம்பவங்கள்" (plot points) இருக்க வேண்டும். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் சம்பவம்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் சம்பவம்' உதவுகிறது.


நீங்க ஏதாவதுஒரு  பட்த்தை எடுத்து இந்த மூன்றங்க அமைப்போடு ஒப்பிட்டு பாருங்க அதான் சிறந்த பயிற்சியா இருக்கும்.

     நன்றி

1 கருத்து: