திங்கள், 28 பிப்ரவரி, 2011

பாதையை தேடாதே.. உருவாக்கு

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். - புரட்சியாளர் ‍அம்பேத்கர்

'கொலை வாளினை எடடா
மிகும் கொடியோர் செயல் அறவே' -புரட்சிக்கவி.பாரதிதாசன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே - சேகுவேரா

கடவுளை மற மனிதனை நினை!!!- பெரியார்

"மனித குலத்தின் நன்மைக்காக சிறப்பாக
செயல்படுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்."- ‍காரல் மார்க்ஸ்


"பாதையை தேடாதே.. உருவாக்கு" - லெனின்

"வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்." - மாவீரன் பகத்சிங்


தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா
- பட்டுக்கோட்டை


"வறுமையினால் சாவு அதிகமானால், சாவுக்குப் பதிலாகக் கலகத்தை அறுவடை செய்'' - ‍மெக்சிகப் புரட்சியாளர் மார்க்கோஸ்


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
- அப்துல் ரகுமான்

1 கருத்து:

  1. மிகவும் அருமையான தத்துவங்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பா...!!

    பதிலளிநீக்கு