வெள்ளி, 14 ஜனவரி, 2011

எப்படி எழுதுவது "ஒள'காரத்தை?

தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துகள் உள்ளன. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், "ஒளகார விறுவாய்ப் பன்னீரெழுத்து உயிரென மொழிப' (8) என்ற சூத்திரம் உள்ளது.
ஆனால், தமிழ் வட்டெழுத்தில் பதினோரு உயிரெழுத்து வடிவங்களே கிடைத்துள்ளன. பாண்டிய, சேர நாட்டு தமிழ் வட்டெழுத்தில் "ஒள' வடிவம் இல்லை.
"பண்டைய தமிழ் எழுத்துகள்' என்ற நுõலில், வட்டெழுத்தின் வடிவங்களை தி.நா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். அந்த அட்டவணையிலும் "ஒள' எழுத்து வடிவம் இருப்பதாக குறிப்பிடவில்லை.
கி.பி., எட்டாம் நுõற்றாண்டில் இருந்து 17ம் நுõற்றாண்டு வரையில் திருவிதாங்கூர் ராச்சியத்தில் கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துச் செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும் படித்த கோபிநாதராவ், தாம் வெளியிட்ட வட்டெழுத்து அட்டவணையில் "ஒள' வடிவம் இருப்பதாக குறிப்பிடவில்லை. மேலும், "ஒள' எழுத வேண்டிய இடத்தில் "அவ்' என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
"சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து'  தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நுõலில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக